இலங்கையின் முதற்தர குழந்தைப் பராமரிப்பு வர்த்தக நாமமான பேபி செரமி, Baby Cheramy Diaper Helpdesk என்ற நாட்டின் முதல் Generative AI இனை அடிப்படையாகக் கொண்ட டயப்பர் நிபுணர் இனை அறிமுகம் செய்துள்ளது. இந்த முன்னோடி உதவிச் சேவையானது, பெற்றோரது நம்பகமான பங்காளி என்ற பேபி செரமி டயப்பர்களின் வகிபாகத்தை வலுப்படுத்துவதோடு, பெற்றோருக்கு குழந்தை டயப்பர் பராமரிப்பு குறித்த உடனடியானதும், நிபுணர்களால் உறுதிப்படுத்தபட்டதுமான வழிகாட்டுதல்களை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் தனிநபர் தேவைக்கேற்ப வழங்குவதன் மூலம் மொழி ரீதியான தடைகளை தகர்த்தெறிந்து, நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு…
மாத்தறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழப்பு

மாத்தறை – தேவேந்திரமுனை பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை இலக்கு வைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வேன் ஒன்றில் பிரவேசித்த தரப்பினர் இவ்வாறு துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளதுடன் அவர்கள் தப்பிச் சென்று சிறிது தூரத்துக்குப் பின்னர் குறித்த வேனை தீ மூட்டியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மாத்தறை – தேவேந்திரமுனை பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 29 வயதுடைய இருவரே இவ்வாறு துப்பாக்கி பிரயோகத்துக்கு இலக்காகியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்