அனைத்து சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளைத் தொடங்கியுள்ளன. சிறைச்சாலை அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரி பல்வேறு தனிநபர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து இந்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில், வங்கிக் கணக்குகள், வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களிலும் முழுமையான விசாரணை நடத்தப்படும். அனைத்து சிறைச்சாலை அதிகாரிகளும்…
மார்ச் முதல் 13 நாட்களில் இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை

மார்ச் மாதத்தின் முதல் 13 நாட்களுக்குள் மட்டும் சுமார் ஒரு லட்சம் வரையான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
முதலாம் திகதி மார்ச் முதல் 13ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 97 ஆயிரத்து 322 பேர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இவர்களில் கூடுதலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் இருந்தே இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
மார்ச் மாதத்திற்குள் மட்டும் 14,848 இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
அதே நேரம் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் மொத்தமாக 5 லட்சத்து 90 ஆயிரத்து 300 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
