இலங்கை வேகப்பந்து வீச்சாளர் துஸ்மந்த சமீர (Dushmantha Chameera ) நேற்று(ஏப்ரல் 29) நடைபெற்ற IPL இன் 48வது போட்டியின் போது DC சார்பாக ஒரு அற்புதமான பிடியெடுத்து KKR துடுப்பாட்ட வீரரை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். லோங்- லெக்கில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த சமீர, இடதுபுறமாக முழு நீளமாக பாய்ந்து இந்த பிடியை எடுத்தார். முன்னதாக நான்கு நாட்களுக்கு முன்னர் இலங்கை வீரரான கமிந்து மெண்டிசும் இவ்வாறான ஒரு சிறப்பான பிடியை எடுத்து எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியிருந்தார்.
மின்னுற்பத்தி திட்டங்களில் இருந்து விலகுவதாக அதானி நிறுவனம் அனுப்பிய கடிதம்.

இலங்கையில் உத்தேசிக்கப்பட்ட 2 காற்றாலை மின்னுற்பத்தி திட்டங்களில் இருந்து விலகுவதாக அதானி நிறுவனம் இலங்கை முதலீட்டு சபையின் தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
இதற்கான பின்னணி ,
ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான திட்டங்களினூடாக மின்சார செலவைக் குறைப்பதற்கு இலங்கை அரசாங்கம் அதானி குழுமத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியபோதும் அந்நிறுவனத்தின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை அடுத்து அவர்களுடனான காற்றாலை மின் உற்பத்தி திட்ட ஒப்பந்தத்தை மீள் பரிசோதனைக்கு உட்படுத்தியது.
இதனால் அரசு அந்த ஆலைகளுக்கான அனுமதியை வழங்காமல் தாமதித்தது மேலும் இத்திட்டத்துக்கான அனுமதி உரியமுறையில் வழங்கப்படவில்லையென அதானி நிறுவனத்தின் காற்றலை மின் திட்டத்திற்கு எதிராக வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டன.
அதன் பின்னணியிலேயே இந்த விலகளுக்கான கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திலிருந்து அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் விலகுவதாக செய்திகள் வெளிவந்ததை அடுத்து அந்நிறுவனங்களுக்கான பங்குகள் 3% உயர்வை எட்டியுள்ளது.