உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கை நிறைவடைந்த நாளிலிருந்து 35 அல்லது 49 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேற்சை குழுக்கள் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு குறைந்தபட்சம் 35 நாட்கள் வழங்கப்படும். இதற்கமைய வேட்புமனுக்கள் தாக்கல்…
முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் – பிணையும் வழங்கப்பட்டது.

முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன ஊழல் குற்றச்சாட்டில் ஈடுபட்டதாக தெரிவித்து இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட வழக்கிற்கு கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று(வெப்ரவரி 18) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பியங்கர ஜயரத்ன சிவில் விமான சேவைகள் அமைச்சராக செயற்பட்ட காலப்பகுதியில் 494,000 ரூபாவை சிலாபத்திலுள்ள வங்கியொன்றில் வைப்பிலிடுமாறு அதிகாரிகளை கோரியதன் ஊடாக இலஞ்ச ஊழல் தடைச்சட்டத்தின் கீழ் தவறிழைத்துள்ளதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் பியங்கர ஜயரத்னவை தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றின் நீதிபதி மஞ்சுள திலக ரத்ன உத்தரவிட்டுள்ளார்.