நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
யாழ். பல்கலைக்கழக மாணவன் போதைப்பொருளுடன் கைது – நீதிமன்றம் விளக்கமறியல் உத்தரவு
யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவபீட மாணவன் போதைப்பொருளுடன் கைதான நிலையில் எதிர்வரும் 30ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட போதை தடுப்பு பொலிஸ் பிரிவினருக்குக்கு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (16) கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மருத்துவ பீட இரண்டாம் வருட மாணவனை கைது செய்து சோதனையிட்ட போது , மாணவனின் உடமையில் இருந்து, 33 கிராம் 230 மில்லிக்கிராம் ஹசீஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த மாணவன் ஊவா மாகாணத்தை சேர்ந்த பெரும்பான்மையின மாணவன் எனவும், மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்றைய தினம் திங்கட்கிழமை (17) யாழ். நீதவான் நீதிமன்றில் மாணவனை முற்படுத்திய நிலையில் எதிர்வரும் 30ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறும் மன்று உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

