சுனிதா வில்லியம்ஸ் மற்றும் குழுவினர் பூமிக்குத் திரும்புவது எப்போது என்பது குறித்த கால அட்டவணையை நாசா வெளியிட்டுள்ளது. (கீழே இலங்கை நேரப்படி விவரங்கள் தரப்பட்டுள்ளன) மார்ச் 18 காலை 8:15 மணி – சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் மற்றும் ஏனைய குழுவினர் டிராகன் விண்கலத்திற்குள் செல்வார்கள். காலை 10:35 மணி – டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை விட்டு பிரியும் (Undocking) மார்ச் 19 அதிகாலை 2:15 மணி – பூமிக்கு திரும்புவதற்கான பயணம்…
யாழ். வட்டுக்கோட்டையில் தண்ணீர் மோட்டார் திருடியவர் கைது

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் – வேரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தண்ணீர் மோட்டாரை திருடிய நபர் அந்த மோட்டாருடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருட்டு இடம்பெற்ற வீட்டில் 3 பெண்கள் தனியாக இருந்தவேளை திங்கட்கிழமை (மார்ச் 17) அதிகாலை குறித்த சந்தேகநபர் அந்த வீட்டில் உள்ள களஞ்சியசாலையின் ஓட்டினை பிரித்து இறங்கி மோட்டாரினை திருடியுள்ளார். இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் தீவிர விசாரணைகளை மேற்கொண்ட வட்டுக்கோட்டை பொலிஸார் நேற்றையதினமே (மார்ச் 17) அதே பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை கைது செய்து விசாரித்தன் அடிப்படையில் மோட்டாரினை மீட்டனர்.
பின்னர் அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியவேளை அவர் போதைவஸ்துக்கு அடிமையானவர் என்ற விடயம் தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறும், விளக்கமறியல் முடிவடைந்த பின்னர் புனர்வாழ்வுக்கு உட்படுத்துமாறும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.