உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கை நிறைவடைந்த நாளிலிருந்து 35 அல்லது 49 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேற்சை குழுக்கள் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு குறைந்தபட்சம் 35 நாட்கள் வழங்கப்படும். இதற்கமைய வேட்புமனுக்கள் தாக்கல்…
வனவிலங்கு சேதத்தை குறைக்க அரசின் புதிய நடவடிக்கை

வன விலங்குகளால் பயிர்கள் சேதமடைவதைத் தடுக்கவும், பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகளின் மேலாண்மைக்குத் தேவையான பரிந்துரைகளைப் பெறவும் சிறப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
விவசாயம், கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்தக் குழுவின் தலைவராக விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் மேலதிக செயலாளர் டி. எஸ் ரத்னசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த குழுவிற்கு மேலும் 15 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.