பயணப்பொதியில் மறைத்து வைத்துக் கொண்டுவரப்பட்ட தோட்டாக்களுடன், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த 30 வயதுடைவரே கைதாகியுள்ளார். குறித்த நபர் குவைத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குவைத்தில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்துக்கு வந்து, சென்னை நோக்கிப் பயணிக்கவிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக விமான நிலைய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வெலிக்கடை சிறையில் உயிரிழந்த இளைஞன் – முழுமையாகப் பிரேத பரிசோதனைக்கு உத்தரவு

வெலிக்கடை பொலிஸாரின் காவலில் இருந்தபோது இறந்த இளைஞரின் சடலத்தை தோண்டி எடுக்குமாறு கொழும்பு தலைமை நீதித்துறை மருத்துவ அதிகாரிக்கு (JMO) கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, மூன்று சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழு மூலம் இளைஞரின் சடலத்தை முழுமையாகப் பிரேத பரிசோதனை செய்து, நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு தலைமை நீதித்துறை மருத்துவ அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட தரப்பினரால் செய்யப்பட்ட மேன்முறையீட்டை பரிசீலித்த பின்னர், கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா இன்று (ஏப்ரல் 09) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.