இலங்கையின் முதற்தர குழந்தைப் பராமரிப்பு வர்த்தக நாமமான பேபி செரமி, Baby Cheramy Diaper Helpdesk என்ற நாட்டின் முதல் Generative AI இனை அடிப்படையாகக் கொண்ட டயப்பர் நிபுணர் இனை அறிமுகம் செய்துள்ளது. இந்த முன்னோடி உதவிச் சேவையானது, பெற்றோரது நம்பகமான பங்காளி என்ற பேபி செரமி டயப்பர்களின் வகிபாகத்தை வலுப்படுத்துவதோடு, பெற்றோருக்கு குழந்தை டயப்பர் பராமரிப்பு குறித்த உடனடியானதும், நிபுணர்களால் உறுதிப்படுத்தபட்டதுமான வழிகாட்டுதல்களை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் தனிநபர் தேவைக்கேற்ப வழங்குவதன் மூலம் மொழி ரீதியான தடைகளை தகர்த்தெறிந்து, நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு…
வேதன விடயத்தில் அரசாங்கம் இன்னும் அக்கறையுடன் செயற்ட்படவில்லை – ஜோசப் ஸ்டாலின்

பயங்கரவாத தடைச் சட்டத்தை இல்லாது ஒழிப்போம் எனக்கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தற்போது அந்தச்சட்டத்தைப் பயன்படுத்தி பலஸ்தீனப் போராட்டத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவர்களைக் கைது செய்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்குக் கருத்துரைத்த போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
அதிபர், ஆசிரியர் வேதன முரண்பாட்டிற்கு எதிரான போராட்டத்தின் காரணமாகவே தற்போதைய அரசாங்கம் ஆட்சிபீடமேறியது எனச் சுட்டிக்காட்டிய ஜோசப் ஸ்டாலின்,
ஆனாலும் இந்த விடயத்தில் அவர்கள் அக்கறையுடன் செயற்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்