வௌிநாட்டு சிகரெட்டுகளுடன் நால்வர் கைது

600 இலட்சம் ரூபா பெறுமதியான வௌிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேகநபர்கள் நால்வர் சுங்கத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

சமீபத்திய கைப்பற்றப்பட்ட அதிகளவான சிகரெட் தொகை இதுவாகும் என சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

எமிரெட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைதந்த கொழும்பு வெல்லம்பிட்டிய, தெமட்டகொட, பம்பலப்பிட்டிய மற்றும் கொஸ்வத்த பகுதிகளைச் சேர்ந்த 25 முதல் 30 வயதுக்குட்பட்ட நான்கு இளைஞர்களே இவ்வாறு சுங்கத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் நால்வரும் விமான நிலையத்தை விட்டு ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் வெளியேற முயன்ற போது, ஒவ்வொருவரின் முயற்சிகளும் முறியடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவர்களை சோதனையிட்டபோது, அவர்களின் 20 பைகளில் இருந்து குறித்த சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

கைப்பற்றப்பட்ட சிகரெட்டுக்களின் மொத்த பெறுமதி 600 இலட்சம் ரூபா என தெரியவருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *