இலங்கையின் முதற்தர குழந்தைப் பராமரிப்பு வர்த்தக நாமமான பேபி செரமி, Baby Cheramy Diaper Helpdesk என்ற நாட்டின் முதல் Generative AI இனை அடிப்படையாகக் கொண்ட டயப்பர் நிபுணர் இனை அறிமுகம் செய்துள்ளது. இந்த முன்னோடி உதவிச் சேவையானது, பெற்றோரது நம்பகமான பங்காளி என்ற பேபி செரமி டயப்பர்களின் வகிபாகத்தை வலுப்படுத்துவதோடு, பெற்றோருக்கு குழந்தை டயப்பர் பராமரிப்பு குறித்த உடனடியானதும், நிபுணர்களால் உறுதிப்படுத்தபட்டதுமான வழிகாட்டுதல்களை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் தனிநபர் தேவைக்கேற்ப வழங்குவதன் மூலம் மொழி ரீதியான தடைகளை தகர்த்தெறிந்து, நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு…
2024 இல் உயர்தர பரீட்சை எழுதியவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்றிரவு வெளியாகும் எனப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி https://www.doenets.lk/ எனும் இணையத்தளத்திற்குப் பிரவேசிப்பதன் மூலம் பரீட்சை பெறுபேறுகளைப் பார்வையிட முடியும்.
2024 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சை 2,312 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெற்றது.
அனர்த்த நிலைமையின் காரணமாக அதன் நேர அட்டவணையில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.
2024 ஆம் ஆண்டில் 333,185 பேர் உயர்தர பரீட்சைக்குத் தோற்றுவதற்குத் தகுதி பெற்றிருந்ததுடன், அவர்களில் 253,390 பேர் பாடசாலை பரீட்சார்த்திகளாவர்.
அத்துடன் 79,795 தனிப்பட்ட பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றியமை குறிப்பிடத்தக்கது.