அனைத்து சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளைத் தொடங்கியுள்ளன. சிறைச்சாலை அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரி பல்வேறு தனிநபர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து இந்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில், வங்கிக் கணக்குகள், வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களிலும் முழுமையான விசாரணை நடத்தப்படும். அனைத்து சிறைச்சாலை அதிகாரிகளும்…
2025 IPL இல் தலைமைத்துவ மாற்றத்தோடு களம் காணும் அணிகள்.

2025 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் வரும் மார்ச் 22 முதல்மே 25 வரை நடைபெறவுள்ளது. இந்தபோட்டியில் மொத்தம் 10 அணிகளின் பங்கேற்கின்றன.
இந்த 10 அணிகளில், 9 அணிகள் இதுவரை தங்கள் அணித் தலைவர்களை அறிவித்துள்ளன.
அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக சுப்மன் கில்லும், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த முறை, பஞ்சாப் கிங்ஸ் அணியை, கடந்த சீசனில் கொல்கத்தா அணியை ஐபிஎல் பட்டத்திற்கு அழைத்துச் சென்ற ஷ்ரேயாஸ் ஐயர் வழிநடத்துகிறார்.
மேலும், வழக்கம்போல், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சனும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக பாட் கம்மின்ஸும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை ரஜத் படிதர் வழிநடத்துவார்.
கடந்த ஆண்டு பெங்களூரு அணியை பிளெசிஸ் வழிநடத்தினார்.
மேலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக அஜிங்க்யா ரஹானேவும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும், டெல்லி கெபிடல்ஸ் அணி இன்னும் தனது கேப்டனை அறிவிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.