காத்தான்குடி கடற்கரை வீதியில் உள்ள பிரபல சூப்பர் மார்கட் வர்த்தக கட்டிடத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஏற்பட்ட பாரிய தீயினை தீயணைப்புப் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் இணைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த போதிலும் குறித்த வியாபார நிறுவனம் முற்றிலும் சேதமடைந்துடதுடன் பல இலட்சக்கணக்கான ரூபா பெறுமதியான பொருட்களும்,உடைமைகளும் சேதமடைந்துள்ளன..
250 ரூபாவை நெருங்கும் தேங்காயின் விலை – NO சம்பல் NO புட்டு NO ரொட்டி

நாட்டின் சில பகுதிகளில் தேங்காயின் விலை மீண்டும் கிடு கிடு என அதிகரித்துள்ளது.
ஒரு தேங்காய் 240 ரூபாவிற்கும் அதிகமான விலையில் விற்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சில நாட்களாக 180 – 200 ரூபாவிற்கு இடைப்பட்ட விற்பனை செய்யப்பட்ட தேங்காய் மீண்டும் 220 ரூபா முதல் 240 ரூபாவிற்கும் அதிகமாக விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.
இதேவேளை, மே மற்றும் ஜூன் மாதங்களில் நாட்டில் தேங்காய் சாகுபடி அதிகரிக்கும் என்றும் அந்தக் காலப்பகுதியில் தேங்காயின் விலை குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தினால் சந்தையில் தேங்காய் மற்றும் மரக்கறிகளின் விலைகளும் சடுதியாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனால் சிறிய கடைகள் முதல் பெரிய விடுதிகள்வரை சில உணவிற்கு தேங்காய் பூ, தேங்காய் பால் பயன்படுத்துவதை நிறுத்தியுள்ளனர்.
மேலும் வீடுகளிலும் புட்டு,ரொட்டி, தோசை என்பன தேங்காய் சம்பல் இல்லாமல் வேற்று உப உணவுகளுடன் உண்ணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.