28 வயது ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த இளைஞர் சுவிட்சர்லாந்தில் உயிரிழந்தார்

சுவிட்சர்லாந்தின் லாடர்ப்ரூனன் (Lauterbrunnen) பகுதியில் உள்ள கிம்மல்வால்டில், கடந்த ஞாயிற்றுக்கிழமை பேஸ் ஜம்பிங் (Base jumping) விளையாட்டில் ஈடுபட்டிருந்த 28 வயது ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

தனது நண்பருடன் இணைந்து ‘நேபாளப் பாலத்தில்’ இருந்து குதித்தபோது, எதிர்பாராதவிதமாக மலையின் தரைப்பகுதியில் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

மீட்புப் படையினர் ஹெலிகாப்டர் உதவியுடன் அவரது உடலை மீட்டனர். இவ்விபத்து குறித்து சுவிஸ் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

One thought on “ 28 வயது ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த இளைஞர் சுவிட்சர்லாந்தில் உயிரிழந்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *