ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நாடளாவிய ரீதியில் நேற்று புதன்கிழமை (13)மேற்கொள்ளப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்பாட்டின் போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 816 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 851 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்போது, 288 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 450 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 511 கிராம் கஞ்சா போதைப்பொருளும், 685 கஞ்சா செடிகளும், 001 குஷ் போதைப்பொருளும், 004 கிராம் ஹசீஸ்…
50 பேருடன் பயணித்த நேபாளம் விமானம் விபத்து!
காத்மாண்டுவில் இருந்து சுமார் 50 பேருடன் பயணித்த நேபாளம் விமானம் ஒன்று நேபாளத்தின் பத்ராபூர் விமான நிலையத்தில் வைத்து வெள்ளிக்கிழமை (02) இரவு 9 மணியளவில் தரையிறங்கியபோது ஓடுபாதையைத் தாண்டிச் சென்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
நேபாளம் விமானம் வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் பத்ராபூர் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது, விமானம் ஓடுபாதையில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரம் வழுக்கிச் சென்று, அங்கிருந்த ஒரு சிறிய ஓடைக்கு அருகில் நின்றதாகத் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தின் பேச்சாளர் ரின்ஜி ஷெர்பா தெரிவித்தார்


Yo, B52dangnhap is my go-to when I need a quick and reliable login. No messing around, straight to the action! Check it out b52dangnhap.