அனைத்து சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளைத் தொடங்கியுள்ளன. சிறைச்சாலை அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரி பல்வேறு தனிநபர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து இந்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில், வங்கிக் கணக்குகள், வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களிலும் முழுமையான விசாரணை நடத்தப்படும். அனைத்து சிறைச்சாலை அதிகாரிகளும்…
பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி அட்டவணை அறிவிப்பு

10வது பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் ( PSL) போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த போட்டி ஏப்ரல் 11 முதல் மே 18 வரை நடைபெற உள்ளது.
6 அணிகள் விளையாடும் போட்டியில் 34 போட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
முதல் போட்டி ஏப்ரல் 11 ஆம் திகதி நடப்பு சாம்பியனான இஸ்லாமாபாத் யுனைடெட் மற்றும் இரண்டு முறை பிஎஸ்எல் சாம்பியனான லாகூர் கிலாண்டர்ஸ் இடையே நடைபெறும்.
இந்த போட்டி நடைபெறும் காலத்திலேயே ஐபிஎல் போட்டியும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
2025 IPL மார்ச் 22 முதல் மே 25 வரை நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது