இந்தியாவின் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு பிற்பகல் 1.30 மணியளவில் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் (போயிங் 787-8) புறப்பட சில நிமிடங்களில் கீழே விழுந்து தீப்பற்றி எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விமான நிலையத்திற்கு அருகே மேதானி நகர் குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்துள்ளதாகவும், விபத்துக்குள்ளான நிலையில் குறித்த விமானத்தின் வால்பகுதி BJ Medical College’s UG விடுதியில் மோதியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் குடியிருப்புப் பகுதிகளில் உள்ளவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. விமான விபத்து நடந்த…
சீரற்ற காலநிலையால் நீடிக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை.

சீரற்ற காலநிலை காரணமாக பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
பதுளை மாவட்டத்தின் ஹாலியால, பசறை, கந்தகெட்டிய, பதுளை, ஹப்புத்தளை, மீகஹகிவுல, உவபரணகம மற்றும் சொரணதொட்ட பிரதேச செயலகப் பிரிவுகளுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு மேலதிகமாக, நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை பிரதேச செயலகப் பகுதியில் 01 ஆம் கட்டத்தின் கீழ் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.