அனைத்து சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளைத் தொடங்கியுள்ளன. சிறைச்சாலை அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரி பல்வேறு தனிநபர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து இந்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில், வங்கிக் கணக்குகள், வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களிலும் முழுமையான விசாரணை நடத்தப்படும். அனைத்து சிறைச்சாலை அதிகாரிகளும்…
இலங்கையை வந்தடைந்த பராசக்தி HERO – SK IN SL

சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படமான “பராசக்தி” படம் வரலாற்றை பின்னணியாக கொண்ட திரைப்படமாக இருப்பதனால் அதற்க்கேற்ற காட்சிகளை தத்துரூபமாக எடுப்பதற்கு படக்குழு இலங்கை வந்துள்ளது.
இந்த திரைப்ப்டுத்திற்க்கான காட்சிகள் இலங்கையில் பல இடங்களில் படமாக்கப்படவுள்ளன. இதற்காக “பராசக்தி” குழு 10நாட்கள் செலவிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
படக்குழுவோடு சிவகார்த்திகேயன் இன்று(மார்ச் 09) இலங்கை வந்து இணைந்துகொண்டார்.
இந்த படப்பிடிப்புக்கான சகல ஏற்பாடுகளையும் இலங்கையில் Iyngaran Media Solution ஏற்பாடுசெய்துள்ளதோடு இலங்கையில் உள்ள கலைஞர்களுக்கும் வாய்ப்புகளை வழங்க தயாரா உள்ளார்கள்.

