பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் – சந்தேகநபர் கைது.

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியசாலை விடுதியில் கடந்த திங்கட்கிழமை (மார்ச் 10) இரவு பெண் வைத்தியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று (மார்ச் 12) கல்னேவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமையை கண்டித்தும் மற்றும் சந்தேக நபரை உடனடியாக கைது செய்யுமாறு கோரியும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்பரிப்பில் ஈடுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *