இன்று (13) உலக சிறுநீரக தினமாகும் இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக ‘உங்கள் சிறுநீரகங்கள் சரியாக உள்ளதா? – முன்கூட்டியே கண்டறிதல், சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல்’.என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சனத்தொகையில் சுமார் 10% பேர் சிறுநீரகம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும், 2020 இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 164,000 பேர் நாள்பட்ட சிறுநீரக நோயால் (CKD) பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
மரக்கறி விலை மோசடியை கட்டுப்படுத்த நடவடிக்கை

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் நிலவும் விலை மோசடியை விரைவில் நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக வர்த்தக, வாணிப, மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆர். எம். ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்திற்கு இன்று கள விஜயம் மேற்கொண்ட போது பிரதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
பல பொருளாதார மத்திய நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளின் போது இந்த விலை மோசடி முக்கிய பிரச்சினையாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் , விவசாயிகளுக்கு தமது மரக்கறிகளுக்கான விலையைத் தீர்மானிப்பதற்குக்கூடிய வகையிலான முறையை நடைமுறைப்படுத்துவதாகப் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.