மரக்கறி விலை மோசடியை கட்டுப்படுத்த நடவடிக்கை

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் நிலவும் விலை மோசடியை விரைவில் நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக வர்த்தக, வாணிப, மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆர். எம். ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்திற்கு இன்று கள விஜயம் மேற்கொண்ட போது பிரதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

பல பொருளாதார மத்திய நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளின் போது இந்த விலை மோசடி முக்கிய பிரச்சினையாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் , விவசாயிகளுக்கு தமது மரக்கறிகளுக்கான விலையைத் தீர்மானிப்பதற்குக்கூடிய வகையிலான முறையை நடைமுறைப்படுத்துவதாகப் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *