நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மரக்கறி விலை மோசடியை கட்டுப்படுத்த நடவடிக்கை
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் நிலவும் விலை மோசடியை விரைவில் நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக வர்த்தக, வாணிப, மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆர். எம். ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்திற்கு இன்று கள விஜயம் மேற்கொண்ட போது பிரதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
பல பொருளாதார மத்திய நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளின் போது இந்த விலை மோசடி முக்கிய பிரச்சினையாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் , விவசாயிகளுக்கு தமது மரக்கறிகளுக்கான விலையைத் தீர்மானிப்பதற்குக்கூடிய வகையிலான முறையை நடைமுறைப்படுத்துவதாகப் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

