மித்தெனிய முத்தரப்பு கொலையுடன் தொடர்புடைய மற்றுமொருவர் கைது

மித்தெனியவில் இடம்பெற்ற மூன்று கொலைகளுக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து நேற்று (12) கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகளினால் இது மேற்கொள்ளப்பட்டது.

டுபாய்க்கு செல்ல முற்பட்ட போதே அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 23 வயதுடையவர் என குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *