65 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் அமர்த்த சிறைச்சாலைத் துறை தீர்மானித்துள்ளது. முதலாம் மற்றும் இரண்டாம் நிலை ஜெயிலர்கள், சப்-ஜெயிலர்கள், ஜெய்லர் சார்ஜென்ட்கள், காப்பாளர்கள் (Guards), செவிலியர்கள் மற்றும் மருந்தாளர்கள் ஆகிய பதவிகளுக்காகவே இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக ஊடகப் பேச்சாளர் ஏ. சி. கஜநாயக்க தெரிவித்தார். இது தொடர்பான மேலதிக விபரங்களையும் விண்ணப்ப முறைகளையும் சிறைச்சாலைத் துறையின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கோலாகலமாக ஆரம்பமாகும் IPL திருவிழா
உலகின் பணக்கார கிரிக்கெட் லீக் என்று கருதப்படும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) இன்று (22) தொடங்குகிறது.
தொடக்க ஆட்டத்தில் முந்தைய சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.
ஈடன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி உள்ளூர் நேரப்படி இரவு 7.30 க்கு தொடங்குகிறது.
கொல்கத்தா அணிக்கு அஜிங்க்யா ரஹானே தலைமை தாங்குவார் என்றும், பெங்களூரு அணிக்கு ரஜத் படிதார் தலைமை தாங்குவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் பெங்களூர் அணியை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கையின் நுவன் துஷாரா விளையாட உள்ளார்.
10 அணிகள் பங்குபற்றும் வகையில் நடைபெறவுள்ள இந்த ஆண்டுக்கான போட்டித் தொடரில் இறுதிப் போட்டி உட்பட 74 போட்டிகள் இடம்பெற்றுள்ளன.

