நாடு திரும்பினார் ஜனாதிபதி.

ஜனாதிபதி கடந்த 10ம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு 3நாள் உத்தியோகபூர்வ வியத்தை மேற்கொண்டார். இந்த வியத்தின் போது பல்வேறுபட்ட முதலீட்டாளர்களோடு தனிப்பட்ட முறையில் கலந்துரையாடல்களில் ஈடுபட்டதோடு, “எதிர்கால அரசாங்கங்களின் வடிவம்” என்ற தொனிப்பொருளில் டுபாயில் (Dubai) நடைபெற்ற 2025 உலக உச்சி மாநாட்டிலும் (World Government Summit) கலந்துகொண்டு உரையாற்றினார்.

மேலும் புல்மன் நகர மையத்தில் நடைபெறும் சமூக வேலைத்திட்டம் ஒன்றில் பங்கேற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை இந்த உத்தியோகபூர்வ பயணத்தில் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தும் பயணமாகியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *