இலங்கையின் முதற்தர குழந்தைப் பராமரிப்பு வர்த்தக நாமமான பேபி செரமி, Baby Cheramy Diaper Helpdesk என்ற நாட்டின் முதல் Generative AI இனை அடிப்படையாகக் கொண்ட டயப்பர் நிபுணர் இனை அறிமுகம் செய்துள்ளது. இந்த முன்னோடி உதவிச் சேவையானது, பெற்றோரது நம்பகமான பங்காளி என்ற பேபி செரமி டயப்பர்களின் வகிபாகத்தை வலுப்படுத்துவதோடு, பெற்றோருக்கு குழந்தை டயப்பர் பராமரிப்பு குறித்த உடனடியானதும், நிபுணர்களால் உறுதிப்படுத்தபட்டதுமான வழிகாட்டுதல்களை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் தனிநபர் தேவைக்கேற்ப வழங்குவதன் மூலம் மொழி ரீதியான தடைகளை தகர்த்தெறிந்து, நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு…
கச்சத்தீவை மீட்கவேண்டும், பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தல்.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்யவுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஏற்கனவே தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அத்துடன் இலங்கை சிறையில் இருந்து தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்களை விடுதலை செய்து மீட்டு வர வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதேநேரம் பாக் வளைகுடா பகுதியில் வாழும் இந்திய கடற்றொழிலாளர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை பாதுகாக்கும் வகையில், கச்சத்தீவை திரும்பப் பெறுவது தொடர்பாக நேற்று (ஏப்ரல் 02) அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மு.க.ஸ்டாலின் முன்வைத்த தீர்மானம், எதிர்கட்சியினரின் மறுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.
முன்னதாக, 1974 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இந்தியா-இலங்கை இடையேயான கச்சத்தீவு ஒப்பந்தமே, மீனவர் கைது மற்றும் சில பிரச்சனைக்கு அடிப்படையாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும் கச்சத்தீவு ஒப்பந்தத்தை ஆரம்பத்திலிருந்தே தமிழ்நாடு அரசு உறுதியுடன் எதிர்க்கிறது என்பதையும் தமிழக முதல்வர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில்தான் பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.