அனைத்து சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளைத் தொடங்கியுள்ளன. சிறைச்சாலை அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரி பல்வேறு தனிநபர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து இந்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில், வங்கிக் கணக்குகள், வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களிலும் முழுமையான விசாரணை நடத்தப்படும். அனைத்து சிறைச்சாலை அதிகாரிகளும்…
த.வெ.க கட்சியின் தலைவர் விஜய்க்கு “Y” பிரிவு பாதுகாப்பு

இந்தியாவின் மத்திய அரசினால் த.வெ.க கட்சியின் தலைவர் திரு.விஜய்க்கு “Y” பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தலை ஆய்வுசெய்து வழங்கப்பட்ட மாநில உளவுத்துறையின் அறிக்கையின் படி மத்திய அரசால் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வகையான பாதுகாப்பு
இதற்க்கு முன் திரு.கருணாநிதி, திரு.ஸ்டாலின் அவர்கள் எதிர்க்கட்ச்சியாக இருந்த போதும் கரும்பூனை படை (BLACK CATS) எனும் பெயரில் வழங்கப்பட்டது.
இந்த கரும்பூனைப்படை பாதுகாப்பினை பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தபின் VIP பாதுகாப்பாக CRPF மாற்றினார். அதில் 6வகை பிரிவுகள் உள்ளன. SPG – Special Protection Group பிரதமருக்கு மட்டும் பாதுகாப்பு, Z+, Z, Y+, Y மற்றும் X என்பனவாகும்.
கடந்தகாலங்களில் நடிகை கங்கனாவிற்கும் Y+ பாதுகாப்பு வழங்கப்பட்டதோடு, நடிகர் சல்மான் கானுக்கு ழ்+ பாதுகாப்பு விடயம்.