இஸ்ரேலின் தாக்குதலுக்கு தற்போது போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இல்லை என்று ஈரான் மத்தியஸ்தர்களான கட்டார் மற்றும் ஓமானிடம் ஈரான் குழுவினர் தெரிவித்துள்ளனர். இரு நாடுகளும் புதிய தாக்குதல்களைத் தொடங்கி, பரந்த மோதல் ஏற்படும் என்ற அச்சத்தை எழுப்பியுள்ள நிலையில், தகவல் தொடர்புகள் குறித்து அதிகாரி ஒருவர் ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்தார். இஸ்ரேலின் முன்கூட்டியே தாக்குதல்களுக்கு ஈரான் தனது பதில் தாக்குதலை முடித்த பின்னரே தீவிர பேச்சுவார்த்தைகளைத் தொடருவோம் என மத்தியஸ்தர்களிடம் தெரிவித்தனர். “தாக்குதலுக்கு உள்ளாகும்போது…
யாழ் – பலாலி வீதி 34 ஆண்டுகளுக்குப் பின்னர் நிபந்தனைகளுடன் திறப்பு

அச்சுவேலியில் இருந்து பருத்தித்துறை கடற்கரை நோக்கிச் செல்கின்ற அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த வீதி இன்று காலை 6 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.
அந்த வீதியில் பயணிப்பதற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பலாலி அதி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ள இராணுவக் குடியிருப்பினூடாகச் செல்லும் இந்த வீதியில், பயணிக்கும் அனைவரும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுதல் வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
குறித்த வீதி, காலை 6 மணி முதல் மாலை 5 வரை மாத்திரம் போக்குவரத்திற்காக திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.