பயணப்பொதியில் மறைத்து வைத்துக் கொண்டுவரப்பட்ட தோட்டாக்களுடன், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த 30 வயதுடைவரே கைதாகியுள்ளார். குறித்த நபர் குவைத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குவைத்தில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்துக்கு வந்து, சென்னை நோக்கிப் பயணிக்கவிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக விமான நிலைய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பேருந்து விபத்தில் நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாணந்துறை மேம்பாலத்திற்கு அருகில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் காயமடைந்து பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
லுணுகம்வெஹெரவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து இன்று (வெப்ரவரி 15) அதிகாலை 4 மணியளவில் கவிழ்ந்து விபத்துள்ளாகியுள்ளது.
விபத்து நடந்த போது பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பேருந்தின் சக்கரங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறே விபத்துக்கு காரணம் என கூறப்படுவதுடன்
விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி பாணந்துறை தெற்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.