Chamber of Lankan Entrepreneurs (COYLE) and the Japan External Trade Organization (JETRO) officially signed a Memorandum of Understanding (MoU) today, a significant step toward strengthening international collaboration and fostering workplace well-being. The partnership is aimed at fostering mutual development and promoting a culture of “Health and Productivity Management” across Sri Lanka’s corporate sector. Held in…
கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்த 24 மணி நேர விசேட அவசர தொலைபேசி இலக்கம்

கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்தும் முகமாக இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களம் 24 மணி நேர விசேட அவசர தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களம் (SLCG), அதன் செயல்பாட்டு அறையுடன் நேரடியாக இணைக்கப்பட்ட 24 மணி நேர விசேட அவசர தொலைபேசி இலக்கமான ‘106’ ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த இலக்கத்தினூடாக, கடல்சார் அவசர சூழ்நிலைகளில் பதிலளிக்கும் நேரத்தைக் குறைப்பதையும் ஒருங்கிணைப்பை மேம்படுத்தவும் எதிர்ப்பிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு, மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மையமாகக் கொண்ட ஒரு முக்கிய ஆணையுடன், கடலோர பாதுகாப்பு திணைக்களம் எண்ணெய் கசிவுகளை சுத்தப்படுத்துதல் மற்றும் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள், மனித கடத்தல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் கடலில் ஏற்படும் பிற அவசரநிலைகள் உள்ளிட்ட பல்வேறு கடல்சார் நிலைமைகளை கட்டுப்படுத்த பங்களிக்கிறது.
இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களம் மீனவர்கள், கடலுடன், தொடர்புடையவர்கள் மற்றும் பொதுமக்கள் 106 என்ற அவசர எண்ணைப் பயன்படுத்தி கடல்சார் அவசரநிலைகளை உடனடியாக முறைப்பாடு பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.