அனைத்து சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளைத் தொடங்கியுள்ளன. சிறைச்சாலை அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரி பல்வேறு தனிநபர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து இந்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில், வங்கிக் கணக்குகள், வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களிலும் முழுமையான விசாரணை நடத்தப்படும். அனைத்து சிறைச்சாலை அதிகாரிகளும்…
ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கும் நிலையை நெருங்கிவிட்டது

ஈரான் தனது சொந்த அணு ஆயுதங்களை உருவாக்கும் நிலையை நெருங்கிவிட்டதாக சர்வதேச அணுசக்தி அமைப்பின் தலைவர் ரஃபேல் மரியானோ க்ரோஸி தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், ஈரான் அணுகுண்டை உருவாக்கும் பணியைத் தொடங்கவில்லை என்றும் அவர் கூறினார். ஈரானிடம் தற்போது அணு ஆயுதங்கள் இல்லை. ஆனால், அவர்கள் விரைவில் அதை சொந்தமாக்கிக் கொள்வார்கள்.
ஈரான் அணுகுண்டை உருவாக்க தேவையான அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டது. மேலும், உலக சமூகம் அவர்களின் யுரேனிய செறிவூட்டலை அமைதியான நோக்கங்களுக்காகப் பயன்படுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
ஈரானிடம் அணுகுண்டை உருவாக்குவதற்கான அனைத்து பாகங்களும் உள்ளன. ஒரு நாள் அவர்கள் அதையெல்லாம் கூட்டுவார்கள். கடந்த நான்கு ஆண்டுகளில் அணுகுண்டை உருவாக்குவதில் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் ஐ.நா. நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக க்ரோஸி ஈரானுக்கு விஜயம் செய்திருந்தார். இதன்போது, ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அர்காச்சி மற்றும் ஈரானின் அணுசக்தி அமைப்பின் தலைவர் முகமது எஸ்லாமி ஆகியோரை அவர் சந்தித்தார்.
இதேவேளை, ஈரானின் அணு ஆயுதங்களை உருவாக்குவதற்கு எதிராக அமெரிக்கா குரல் கொடுத்தது வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.