அனைத்து சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளைத் தொடங்கியுள்ளன. சிறைச்சாலை அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரி பல்வேறு தனிநபர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து இந்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில், வங்கிக் கணக்குகள், வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களிலும் முழுமையான விசாரணை நடத்தப்படும். அனைத்து சிறைச்சாலை அதிகாரிகளும்…
தபால் வாக்காளர்களுக்காக ‘ஈ’ சேவை வசதி

தபால் வாக்காளர்கள் தங்கள் வாக்கை செலுத்தும் இடம் மற்றும் சான்றளிக்கும் அதிகாரியை அடையாளம் காண உதவும் வகையில் ‘ஈ’ சேவை ஒன்று நடைமுறையில் இருப்பதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களையும், அவர்களின் குழுக்கள் மற்றும் கட்சிகளையும், அவர்களின் சின்னங்களையும் அடையாளம் காண எளிதாக்கியுள்ளது என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
eservices.elections.gov.lk என்ற இணைய முகவரியின் ஊடாக பிரவேசித்து தேர்தல் ‘ஈ’ சேவையை அணுக முடியும் எனவும் அதில் அரச அதிகாரிகளுக்கான தபால் வாக்களிப்பு தகவல்களுக்கான இணைப்பை அணுகி தகவல்களை பெற்றுக் கொள்ளமுடியும்.