கொழும்பு, செவ்வாய், 25 ஆகஸ்ட் 2026: இலங்கையின் பெருந்தோட்டத் துறையில் பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவத்தை மறுவரையறை செய்யும் வகையில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், கழிவு மறுசுழற்சி, சமூக வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்த ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தலவாக்கலை டீ எஸ்டேட்ஸ் பிஎல்சி நிறுவனத்திற்குச் சொந்தமான ரதெல்லையில் உள்ள சமர்செட் தோட்டத்தில் சமர்செட் சுற்றுச்சூழல் பொருள் சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையம் (MCPC) நிறுவப்பட்டுள்ளது. இலங்கையில் ‘முறசாரா கழிவு முகாமைத்துவத்தில் பெண்கள் மற்றும் இளைஞர்களின்…
ஈரான் துறைமுகத்தில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் 400 பேர் காயம்
தெற்கு ஈரானின், பந்தர் அப்பாஸ் பகுதியிலுள்ள ஷாஹித் ராஜீ துறைமுகத்தில் இன்று (26) பாரிய வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் 400ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரான் தனது அணுசக்தி திட்டம் குறித்து அமெரிக்காவுடன் ஓமானில் மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
அத்துடன் வெடிப்பு சம்பவத்திற்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை.