ஹல்துமுல்ல, கபரகல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவால் இடம்பெயர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக முகாம்களில் வசித்து வரும் 50 குடும்பங்களுக்காக பதுளை லுனுகல பகுதியில் வீடுகள் அமைக்கப்பட்டுவருகின்றன. குறிப்பிட்ட வீட்டுத் திட்ட கட்டுமானப் பணியில் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தலைமையில் பல அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது அமைச்சர் பதவிகளுக்கு அப்பால், தாம் கட்டடத் தொழிலாளிகளாக பணியாற்றுவதாக அமைச்சர் வித்யாரத்ன தெரிவித்துள்ளார். மேலும் அவர்; 200 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட மலையக…
ஆஸ்துமா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் தற்போது ஆஸ்துமா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார பிரிவினர் கூறுகின்றனர்.
உலகளவில் 100,000 பேரில் 3,340 பேருக்கு ஆஸ்துமா இருப்பதாக சுவாச நோய் வைத்திய நிபுணர் ஆஷா சமரநாயக்க தெரிவித்துள்ளார்.
உலகெங்கிலும் உள்ள இளைஞர்களிடையே ஆஸ்துமா பரவலாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
எதிர்வரும் 6 ஆம் திகதி உலக ஆஸ்துமா தினத்தை முன்னிட்டு அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஊடக சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய போதே வைத்திய நிபுணர் இதனைக் குறிப்பிட்டார்.
“இன்ஹேலர்” சிகிச்சையானது பக்க விளைவுகள் இல்லாமல் ஆஸ்துமாவை மிகச் சிறப்பாக குணப்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
ஆஸ்துமா இருந்தாலும், இந்த நாட்டில் அது கண்டறியப்படாத நோயாளிகள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்” என்றார்.