பயணப்பொதியில் மறைத்து வைத்துக் கொண்டுவரப்பட்ட தோட்டாக்களுடன், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த 30 வயதுடைவரே கைதாகியுள்ளார். குறித்த நபர் குவைத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குவைத்தில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்துக்கு வந்து, சென்னை நோக்கிப் பயணிக்கவிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக விமான நிலைய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
“பிடியளவு கமநிலத்துக்கு” திட்டம் தற்போது உப்புவேலி முத்துநகரில் ஆரம்பம்.

இலங்கை முழுவதுமாக வினைத்திறன் மிக்க விவசாயத்தை ஊக்குவிக்கும் முகமாக அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட தேசிய வேலைத்திட்டமான “பிடியளவு கமநிலத்துக்கு”எனும் திட்டம் நேற்று (வெப்ரவரி 15) திருகோணமலை மாவட்ட உப்புவேலி கமநல சேவைகள் அபிவிருத்தி திணைக்களத்திற்கு உற்பட்ட முத்துநகர் பகுதியில் ஆரம்பமானது.

உப்புவேலி கமநல சேவைகள் அபிவிருத்தி திணைக்களம் மற்றும் முத்துநகர், தகரவெட்டுவான், மத்தியவேலி, அம்மன்குலம் ஆகிய விவசாய சம்மேளனங்களின் ஒருங்கிணைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வானது உப்புவேலி கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் டி.தர்ஷானந்தன் தலைமையில் இடம்பெற்றது.
விவசாயத்தை ஊக்குவிக்கும் இத்திட்டத்தின் ஆரம்பநிகழ்வில் விவசாயிகளுக்கு குறித்த திட்டங்களுக்கான அனுமதி கடிதங்கள் வழங்கப்பட்டதோடு, விவசாய காணிகளின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வுகளும் வழங்கப்பட்டன.




