“வரி சக்தி” வாரம்

தேசிய வரி வாரம் இன்று திங்கட்கிழமை (ஜூன் 02) முதல் ஆரம்பமாகவுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நாயகம் பி.கே.எஸ்.சாந்த இதனை தெரிவித்துள்ளார்.

இதன் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெறவுள்ளது.

“வரி சக்தி” என்ற பெயரில் வரி வாரத்தை செயற்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இதன்படி, இன்று முதல் எதிர்வரும் 7 ஆம் திகதி வரையான காலத்தில் வரி செலுத்துதல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 thoughts on ““வரி சக்தி” வாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *