2026 மார்ச் 17, செவ்வாய்க்கிழமை, இலங்கையில்: இந்திய தேசிய கட்டண வலையமைப்பின் (NPCI) சர்வதேச பிரிவான NIPL இன்டர்நேஷனல் (NIPL) நிறுவனம், இலங்கை முழுவதும் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் UPI கட்டண முறையை விரிவுபடுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இதன் மூலம், இந்திய பயணிகள் இலங்கையில் எளிதாக பணம் செலுத்த வசதியேற்படுத்துவதோடு, இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துவதும், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதும் நோக்கமாகும். இந்தியாவின்…
பொலிஸார் மீது தாக்குதல்: ஐந்து சந்தேகநபர்கள் கைது
பேருவளை பொலிஸ் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி உட்பட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது குழுவொன்று தாக்குதல் நடத்தியதை அடுத்து, அவர்கள் காயமடைந்து நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஐந்து சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தாக்குதல் தொடர்பாக பேருவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
