பயணப்பொதியில் மறைத்து வைத்துக் கொண்டுவரப்பட்ட தோட்டாக்களுடன், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த 30 வயதுடைவரே கைதாகியுள்ளார். குறித்த நபர் குவைத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குவைத்தில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்துக்கு வந்து, சென்னை நோக்கிப் பயணிக்கவிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக விமான நிலைய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் அதிரடி நகர்வு – பாதுகாப்பை அதிகரித்த இஸ்ரேல் – பாதிக்கப்பட்ட ஈரான் அணுசக்தி நிலையங்கள்.

ஈரான் – இஸ்ரேல் மோதலை கண்டித்து பேசிவந்த அமெரிக்காவின் அழைப்புகளை ஈரான் தொடர்ந்து நிராகரித்ததோடு, அமெரிக்காவிற்கு சவால் விட்டதை தொடர்ந்து , அமெரிக்க ஈரானின் முக்கிய அணுசக்தி நிலையங்களை தகர்த்துள்ளது.
போர்டோவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் உள்ளிட்ட ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது நாங்கள் மிகவும் வெற்றிகரமான தாக்குதலை நடத்தி முடித்துள்ளோம் என அமெரிக்கா ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
மேலும் “அனைத்து விமானங்களும் இப்போது ஈரானின் வான்வெளிக்கு வெளியே பாதுகாப்பாக திரும்பி உள்ளன. முதன்மை தளமான போர்டோவில் குண்டுகள் முழுமையாக வீசப்பட்டுள்ளது நமது சிறந்த அமெரிக்க வீரர்களுக்கு வாழ்த்துக்கள். உலகில் வேறு எந்த இராணுவமும் இதைச் செய்திருக்க முடியாது. இப்போது அமைதிக்கான நேரம்! இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு
நன்றி” எனவும் அவர் கூறினார்
இதனை “Fordow is gone” என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஈரானில் மூன்று அணுசக்தி நிலையங்களை அமெரிக்காவின் B2 குண்டுவீச்சு விமானங்கள் தாக்கும் போது, வெள்ளைமாளிகை சூழ்நிலை அறையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் துணைத் ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், வெளியுறவுத் துறை செயலாளர், என்.எஸ்.ஏ மார்கோ ரூபியோ, பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் மற்றும் ஜெனரல் டான் கெய்ன் அமைச்சரவை அதிகாரிகள் கலந்துரையாடும் புகைப்படங்களை வெள்ளை மாளிகை வெளியிட்டது.





அதேநேரம் “ஃபோர்டோ அணுசக்தி நிலையப் பகுதியின் ஒரு பகுதி வான்வழித் தாக்குதலுக்கு உள்ளானது” என்று ஈரானின் கோம் மாகாண செய்தித் தொடர்பாளர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதேவேளை, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் அணுசக்தி தளங்களுக்கு அருகிலும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஈரானிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ட்ரம்பின், ஈரான் மீதான அதிரடி தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பாதுகாப்பை மிக தீவிரப்படுத்தி வருவதாக அறிவித்துள்ளது.