பாகிஸ்தானில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

பாகிஸ்தானில் இன்று(ஜூன் 28) அதிகாலை நில அதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது.

அதிகாலை 3.54 மணியளவில் ஏற்பட்ட இந்த நில அதிர்வு, மெக்னிடியூட் அளவுகோலில் 5.2 ஆகப் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த அனர்த்தத்தினால் கட்டிடங்கள் குலுங்கியதாகவும், உயிரிழப்புகள், சேதங்கள் குறித்த விபரங்கள் வெளியாகவில்லை எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாக்கிஸ்தானில் கடந்த மதம் மட்டுமே 4.2ரிக்டர் மற்றும் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *