குறைந்த வருமானத்தினைக் கொண்ட மேலும் 4 இலட்சம் குடும்பங்களுக்கு எதிர்வரும் ஜூன் மாதம் முதல் அஸ்வெசும நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மக்கள் சந்திப்பொன்றின் போது ஆற்றிய உரையில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் “நாட்டில் குறைந்த வருமானம் கொண்ட மிகவும் சிரமத்திற்கு மத்தியில் வாழும் மக்கள் உள்ளார்கள். அவர்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும தொகையில் நாங்கள் மாற்றங்களைச் செய்துள்ளோம்” 8500 ரூபா அஸ்வெசும தொகையைப் பெற்றவர்கள் தற்போது 10 ஆயிரம் ரூபாவைப் பெறுவார்கள். 15ஆயிரம்…
முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் – பிணையும் வழங்கப்பட்டது.

முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன ஊழல் குற்றச்சாட்டில் ஈடுபட்டதாக தெரிவித்து இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட வழக்கிற்கு கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று(வெப்ரவரி 18) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பியங்கர ஜயரத்ன சிவில் விமான சேவைகள் அமைச்சராக செயற்பட்ட காலப்பகுதியில் 494,000 ரூபாவை சிலாபத்திலுள்ள வங்கியொன்றில் வைப்பிலிடுமாறு அதிகாரிகளை கோரியதன் ஊடாக இலஞ்ச ஊழல் தடைச்சட்டத்தின் கீழ் தவறிழைத்துள்ளதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் பியங்கர ஜயரத்னவை தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றின் நீதிபதி மஞ்சுள திலக ரத்ன உத்தரவிட்டுள்ளார்.