“முழு நாடுமே ஒன்றாக” போதைப்பொருள் சுற்றிவளைப்பில் 868 பேர் கைது!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நாடளாவிய ரீதியில் நேற்று திங்கட்கிழமை (08) மேற்கொள்ளப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்பாட்டின் போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 868 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 869 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்போது, 01 கிலோ 229 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 433 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 193 கிராம் கொக்கேயின் போதைப்பொருளும்,  642 கிராம் கஞ்சா போதைப்பொருளும், 275705 கஞ்சா செடிகளும், 01  கிலோ  084 கிராம் ஹசீஸ் போதைப்பொருளும், 8070 போதை மாத்திரைகளும், 59 மதனமோதக மாத்திரைகளும், 01 கிலோ  007 கிராம் மாவா போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்டவர்களில் 06 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

One thought on ““முழு நாடுமே ஒன்றாக” போதைப்பொருள் சுற்றிவளைப்பில் 868 பேர் கைது!

  1. Hey guys! Just had a crack at win789vn8 and I wasn’t disappointed. Easy to navigate, pretty good payouts from what I saw. Definitely worth a look if you’re in the market for a new spot! More here: win789vn8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *