நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
திருகோணமலை வீர நகர் பகுதியில் மூன்று வீடுகள் சேதம்
திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வீர நகர் கரையோர பகுதியில் கடும் சீரற்ற கால நிலை காரணமாக செவ்வாய்க்கிழமை (05) மூன்று வீடுகள் கடலுடன் தாழ் இறங்கியுள்ளது.
குறித்த வீட்டில் வசிக்கும் 19 நபர்கள் உறவினர்கள்களின் வீடுகளில் வசித்து வருகின்றனர். தொடர்ந்தும் கடலின் அலை அதிகமான தாக்கம் காரணமாக குறித்த வீடுகள் மேலும் பாதிப்பினை ஏற்படுத்தும் என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். எதிர் வரும் காலங்களில் இவ்வாறான சீரற்ற கால நிலை மோசமடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுடைய வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். எனவே தங்களுக்கு நிவாரணம் வழங்குமாறும் உரிய அதிகாரிகளிடத்தில் கோரிக்கை விடுக்கின்றனர்.
இவ்வாறான நிலையில் இது குறித்து திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் அவர்கள் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம், திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் ஊடாக கலந்துரையாடி நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்தார்





Alright guys! 69vnvvip, I gotta say, pretty solid! Site’s easy to use, quick loading times. Give 69vnvvip a try! I think you’ll dig it. –> 69vnvvip
If you’re a slots fan, Microstar88slot is where it’s at. Tons of different games, something for everyone. I’ve hit a few decent wins too! Give it a spin microstar88slot