2026 ஆம் ஆண்டின் முதல் 05 நாட்களில் 793 பேருக்கு டெங்கு!

2026 ஆம் ஆண்டின் முதல் 05 நாட்களில் மாத்திரம் சுமார் 793 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதேநேரம், கடந்த ஆண்டு டெங்கு நோயினால் 26 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக நிபுணர் வைத்தியர் பிரஷீலா சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த ஆண்டு சுமார் 51,438 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அவர்களில் அதிக எண்ணிக்கையிலானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் ஏற்பட்ட டித்வா சூறாவளிக்குப் பின்னர், இதுவரை டெங்கு காய்ச்சல் மற்றும் நோயாளர்களின் எண்ணிக்கையில் தெளிவான அதிகரிப்பு காணப்படவில்லை எனவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக நிபுணர் வைத்தியர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார்.

2 thoughts on “2026 ஆம் ஆண்டின் முதல் 05 நாட்களில் 793 பேருக்கு டெங்கு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *