“முழு நாடுமே ஒன்றாக” போதைப்பொருள் சுற்றிவளைப்பில் 941 பேர் கைது!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நாடளாவிய ரீதியில் ஞாயிற்றுக்கிழமை (4) மேற்கொள்ளப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்பாட்டின் போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 941 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 952 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்போது, 397 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 566 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 31  கிலோ  776 கிராம் கஞ்சா போதைப்பொருளும், 156311 கஞ்சா செடிகளும், 001 கிராம் குஸ் போதைப்பொருளும், 068 கிராம் ஹசீஸ் போதைப்பொருளும், 1215 போதை மாத்திரைகளும், 109 கிராம் 200 மில்லிகிராம் மதனமோதக மாத்திரைகளும், 188 கிராம் மாவா போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்டவர்களில் 06 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

2 thoughts on ““முழு நாடுமே ஒன்றாக” போதைப்பொருள் சுற்றிவளைப்பில் 941 பேர் கைது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *