நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
டித்வா தொடர்பில் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க தவறியமை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க நடவடிக்கை
டித்வா புயல் அனர்த்தம் தொடர்பில் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க தவறியமை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க அமைக்கவுள்ள விசேட செயற்குழுவின் தலைமைப் பொறுப்பு எதிர்க்கட்சிக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி பிரதம கொறடா கயந்த கருணாதிலக்க கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (6) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்ட டித்வா புயல் அனர்த்தம் தொடர்பில் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டதா அல்லது நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதா என தேடிப் பார்த்து அறிக்கை சமர்ப்பிக்க பாராளுமன்ற செயற்குழுவொன்றை அமைக்குமாறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 20க்கும் அதிகமானவர்கள் கைச்சாத்திட்டு மகஜர் ஒன்று சபாநாயகராகிய உங்களிடம் கடந்த மாதம் 18ஆம் திகதி கையளித்திருந்தனர்..
அரசாங்கம் அந்த செயற்குழுவை உண்மையாக அமைப்பதாக இருந்தால், அந்த குழுவின் தலைமை பொறுப்பை எதிர்க்கட்சிக்கு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இதற்கு முன்னரும் இவ்வாறான விசேட செயற்குழு அமைக்கப்பட்டபோது, எதிர்க்கட்சிக்கே அதன் தலைமை பதவி வழங்கப்பட்டது.


Heard good buzz about 9096betvip and gave it a shot. They’re super legit and professional. Definetly a place to check out! Get your game on at 9096betvip!