7 News Pulse

தனது முல்லைத்தீவு கிளையைபுதிய இடத்திற்கு மாற்றும் HNB FINANCE.

இலங்கையின் முன்னணி ஒருங்கிணைந்த நிதி சேவை வழங்குநரான HNB FINANCE PLC, தனது முல்லைத்தீவில் உள்ள தனது கிளையை புதிய இடத்திற்கு இடமாற்றம் செய்வதாக அறிவித்துள்ளது. இந்த முயற்சி, நாடு முழுவதும் ஒருங்கிணைந்த நிதி சேவைகளுக்கான அதிகரித்து வரும் தேவையை நிவர்த்தி செய்வதற்கும் அணுகலை மேம்படுத்துவதற்கும் நிறுவனத்தின் உறுதிப்பாட்டை இந்த இடமாற்றம் பிரதிபலிக்கிறது. இந்த புதிய HNB FINANCE முல்லைத்தீவு கிளை முல்லைத்தீவு பிரதான வீதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய கிளை திறப்பு நிகழ்வு HNB…

Read More

முன்னை நாதருக்கு உற்சவம் ஆரம்பம்.

பஞ்ச ஈஸ்வரங்களில் முதன்மை பெற்றதும் 51 சக்தி பீடங்களில் ஒன்றுமான சிலாபம் முன்னேஸ்வரம் ஸ்ரீ வடிவாம்பிகா சமேத ஸ்ரீ முன்னை நாதஸ்வர சுவாமி ஆலயத்தின் கொடியேற்றத் திருவிழா இன்று(மார்ச் 4) செவ்வாய்க்கிழமை சுப வேளையில் ஆலயப் பிரதம குரு தலைமையில் இடம்பெற்றது.

Read More

அனந்த் அம்பானியின் கனவுத்திட்டத்தை திறந்துவைத்தார் பிரதமர் மோடி

ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானியின் நீண்ட நாள் கனவுத் திட்டமான வந்தாரா(Vantara) விலங்குகள் மறுவாழ்வு மையம் குஜராத்தின் ஜாம்நகரில் 3,500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. அந்த அழகிய மையத்தை பிரதமர் மோடி இன்று(மார்ச் 4) திறந்து வைத்ததோடு ஒவ்வொரு விலங்குகளாக தனித்தனியே நேரம் செலவு செய்து உணவூட்டி மகிழ்ந்தார் பிரதமர் மோடி. அனந்த் அம்பானியின் திருமணத்திற்கு வருகைதந்த பிரபலங்கள் இந்த வந்தாராவை பார்வையிட்டு வியந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயம்.

Read More

கனடா மற்றும் மெக்சிகோவிற்கு இன்று முதல் 25% வரி

மெக்சிகோ மற்றும் கனடா மீதான 25% வரி அதிகரிப்பு இன்று (மார்ச் 04) அமலுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையைத் தவிர்க்க முடியுமா என்பது குறித்து பல வாரங்களாக இருந்த சந்தேகங்கள் முடிவுக்கு வந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மெக்சிகன் மற்றும் கனேடிய அதிகாரிகள் ஒரு வழியைக் கண்டுபிடிக்க முயற்சித்தாலும், இந்த நடவடிக்கை தொடரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மேலும் தெரிவித்தார்.

Read More

2025 IPL இல் தலைமைத்துவ மாற்றத்தோடு களம் காணும் அணிகள்.

2025 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் வரும் மார்ச் 22 முதல்மே 25 வரை நடைபெறவுள்ளது. இந்தபோட்டியில் மொத்தம் 10 அணிகளின் பங்கேற்கின்றன. இந்த 10 அணிகளில், 9 அணிகள் இதுவரை தங்கள் அணித் தலைவர்களை அறிவித்துள்ளன. அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக சுப்மன் கில்லும், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த முறை, பஞ்சாப் கிங்ஸ்…

Read More

வசூலை வாரிக்குவிக்கும் டிராகன் திரைப்படம். இதுவரை எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய நடிகர்களில் ஒருவர் பிரதீப் ரங்கநாதன். இயக்குநராக அறிமுகமாகி, பின் ஹீரோவாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த டிராகன் திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. 10 நாட்களில் உலகளவில் ரூ.100 கோடி box officeல் இணைந்து சாதனை படைத்துள்ளது. ஹீரோவாக பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ் டுடே மற்றும் டிராகன் இரண்டு திரைப்படங்களும் ரூ. 100 கோடி பாக்ஸ் ஆபிஸில் இணைந்துள்ளது….

Read More

இலங்கையில் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய மீன்பிடிக்கப்பலின் முன்னோட்ட பயணம்.

இலங்கையின் உற்பத்தியாளர்களின் அறிவு, திறன் என்பவற்றால் நவீன தொழில்நுட்பத்துடன் Dhanusha Marine நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட “maanya mooya” எனும் பெயர் கொண்ட கப்பலுக்கான அதற்கான முன்னோட்ட பயணம் இடம்பெற்று , சோமாலியாவிலுள்ள அரச நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரும் கலந்துகொண்டார். இலங்கையில் உற்பத்தி பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான பயணத்தில் இது முக்கிய மைல்கல்லாகும்.

Read More

மகளீர் விவகார அமைச்சரின் செயல் மக்களால் வெகுவாக பாராட்டைப்பெற்றுள்ளது.

ஜெனீவாவில் வெப்ரவரி 11 தொடக்கம் 16வரை நடைபெற்ற CEDAW உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு நாடு திரும்பிய மகளிர் விவகார அமைச்சர் சரோஜா பால்ராஜ் ஒதுக்கப்பட்ட செலவுகளுக்காக பணத்தொகையின் மிகுதியை அரசாங்கத்திற்கு 240 அமெரிக்க டாலர்களாக திருப்பி கொடுத்திருக்கின்றார். அதற்கான பற்றுச்சீட்டும் பெறப்பட்டுள்ளது. இந்த விடயம் தற்பொழுது சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்படுவதோடு, அவருக்கான பாராட்டுகளும் குவிகின்றன.

Read More

Nations Trust Bank Private Banking Celebrates Sri Lankan Artistry with Kala Pola 2025 Painting Giveaway.

Nations Trust Bank Private Banking through the Kala Pola 2025 Painting Giveaway, organized by the John Keells Foundation, reinforced its dedication to Sri Lanka’s thriving art scene and strengthened its position as the event’s Official Banking Partner. This program demonstrates Nations Trust Bank’s commitment to fostering local artistic talent and introducing the nation’s creative heritage…

Read More