யாழ். ஓமந்தை கார் விபத்தில் படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சுவாமிநாத ஐயா என்றழைக்கப்படும் சந்திரன் ஐயா என்பவரே நேற்றையதினம் வெள்ளிக்கிழமை(ஜூன் 20) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வவுனியா ஓமந்தை பகுதியில் கடந்த 26ஆம் திகதி அதிகாலை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கார், எதிரே வந்த டிப்பருடன் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரக அலுவலர் பிரம்மஸ்ரீ சச்சிதானந்த குருக்கள் பிரபாகரசர்மா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்….

51 சக்திபீடங்களில் முதன்மையான திருகோணமலை ஸ்ரீ அருள்மிகு பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்
தெட்சண கைலாயம் எனப்படுவதும் பாடல் பெற்றதுமான திருக்கோணேஸ்வரர் வீற்றிருக்கும் திருகோணமலையில் எழுந்தருளி அருளாட்சி புரியும் பூலோக மகாசக்தி , சக்தி பீடங்களில் முதன்மையானதும் வேண்டுவோர்க்கு வேண்டுவன அருளும் ஸ்ரீ அருள்மிகு பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழா சித்திரை மாதம் 1ம் திகதி செவ்வாய்க்கிழமை துவஜாரோகணம் எனப்படும் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தினமும் காலை 5.30 மணிக்கு அபிஷேகம், காலை 7.00 மணிக்கு மூலஸ்தான பூஜை, 7.45க்கு தம்ப பூஜை, 8.30 மணிக்கு வசந்த மண்டப பூஜையுடன்…