7 News Pulse

ஜனாதிபதியின் நேரடி கண்காணிப்பில் மீட்ப்பு நடவடிக்கை.

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இருந்து மக்களை காப்பாற்றும் நடவடிக்கைகளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கண்காணித்துள்ளார். அநுராதபுரம் – புத்தளம் வீதியில் உள்ள கலா ஓயா பாலத்தின் அருகில் வெள்ளப் சிக்கிய பேருந்திலுள்ள பயணிகளை மீட்கும் நடவடிக்கை முன்னெடுக்கபட்டது. கடற்படையின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த வீரர்கள் அதிகாலை வேளையில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் விமான படையின் தலைமையகத்தில் அமைக்கப்பட்டுள்ள விசேட அரங்கில் ஜனாதிபதி நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார்.

Read More

Study Queensland, Trade and Investment Queensland (TIQ) Strengthen Global Education Pathways for Sri Lankan Students

Trade and Investment Queensland (TIQ), the Queensland Government’s global business agency, together with Study Queensland, has strengthened its commitment to expanding high-quality international education opportunities for Sri Lankan students through a special two-day engagement programme featuring representatives from five leading Australian universities. Delegates from Griffith University, James Cook University, Bond University, Central Queensland University, and…

Read More

மூடப்பட்டுள்ள பேராதனை பல்கலைக்கழகம்!

தற்போதைய மோசமான வானிலை காரணமாக பேராதனை பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது. விடுதிகளில் உள்ள மாணவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு பல்கலைக்கழக நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும் விடுதிக்கருகாமையிலும் வெள்ளநீர் ஊடுருவியுள்ளது. மேலும், கனமழை காரணமாக மகாவலி நதி நிரம்பி வழிவதால் பேராதனையில் உள்ள றோயல் தாவரவியல் பூங்கா (மல்வத்தை) தற்போது நீரில் மூழ்கியுள்ளது. அதன்படி, பல்கலைக்கழகத்தைச் சுற்றியுள்ள பல தாழ்வான பகுதிகளும் தண்ணீரில் நிரம்பியுள்ளன. அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர். காணொளி –…

Read More

புத்தளம் நகர் வெள்ளத்தில் மூழ்கியது.

நேற்று காலையில் இருந்து தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக புத்தளம் நகர் உள்ளடங்கலாக பெரும்பாலான பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. பலர் பாதுகாப்பான இடங்களுக்கும், தெரிந்தவர்கள் இல்லத்துக்குமாக மாற்றியனுப்பப்பட்டுள்ளார்கள். அவசர கால நிலைத்தொடர்பில் உதவிகளை பெற்றுக்கொள்ள 117 என்கின்ற எண்ணுக்கு அழைப்பை மேற்க்கொள்ளுங்கள். காணொளி பதிவு – கிருஷான் யோகராசா

Read More

இலங்கையில் வரலாறு காணாத மழைவீழ்ச்சி பதிவு.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள முழுமையான அறிக்கையில் 27.11.2025 காலை 8.30மணியில் இருந்து 28.11.2025 காலை 8.30மணிவரைக்குமான காலப்பகுதியில் இலங்கையில் வரலாறு காணாத மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

ஹாலியெல டிக்வெல கீழ்ப்பிரிவு தோட்டத்தில் மண்மேடு சரிந்து வீழ்ந்தத.

நேற்றிரவு பெய்த கடுமையான மழைக்காரணமாக ஹாலியெல டிக்வெல கீழ்ப்பிரிவு தோட்டத்தில் பாடசாலைக்கு அருகாமையில் இருந்த வீட்டின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் வீட்டில் இருந்த அனைவரும் மண்ணுக்குள் புதையுண்டுள்ளனர். இவர்களை தேடும் பணி இடம்பெற்று வரும் நிலையில் தற்போது ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. புகைப்படம் – Ganeshan Mahadevan

Read More

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார் இஸ்மாயில் முத்து முகமது!

நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் முத்து முகமது தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், கட்சியின் முடிவின்படியும், கட்சித் தலைமைக்கு துரோகம் இழைக்காமல் இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். இஸ்மாயில் முத்து முகமது, தேசியப் பட்டியல் மூலம் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

நிவாரணங்களை வழங்குவதற்கு 1.2 பில்லியன் ரூபா ஒதுக்கீடு

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1.2 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் இந்த விடயத்தை அறிவித்துள்ளது. இதற்கு மேலதிகமாக நிதி தேவைப்பட்டால் அறிவிக்குமாறு ஜனாதிபதி அநுர அறிவித்துள்ளார்.  அரச நிர்வாக மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சரின் செயலாளர் ஊடாக இந்த தகவலை ஜனாதிபதி, சகல மாவட்டச் செயலாளர்களுக்கும் அறிவித்துள்ளார். நிகழ்நிலை தொழில்நுட்பத்தின் ஊடாக ஜனாதிபதி இன்றைய தினம் காலை மாவட்டச் செயலாளர்களுடன் கலந்துரையாட உள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர்…

Read More

வடக்கு நோக்கி நகரும் டிட்வா புயல் பிற்பகலில் வேகம் அதிகரிக்கும்!

டிட்வா புயல் தற்போது வாழைச்சேனைக்கும் பொலன்னறுவைக்கும் இடையில் மையம் கொண்டுள்ளது. இது தொடர்ந்து வடக்கு, வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து வருவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் தலைவரும், வானிலை ஆய்வாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். நிலவும் வானிலை குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று மாலை வரை மணிக்கு 18 கி.மீ. வேகத்தில் நகர்ந்த புயலானது தற்போது மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் நகர்கின்றது. நேற்றைய தினம்(27) டிட்வா புயலின் மையச்சுழற்சி மணிக்கு…

Read More