7 News Pulse

வவுணதீவில் வீட்டில் உறங்கியநிலையில் குழந்தை இறப்பு.

மட்டக்களப்பு- நாவற்காடு கிராமத்தில் வீட்டில் தாயுடன் உறக்கத்திலிருந்த குழந்தை இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிறந்து மூன்று மாதமான குழந்தை நேற்று (மார்ச் 9) இரவு தாயாரிடம் பால் அருந்திவிட்டு தாவுடனே உறங்கியுள்ளது. இன்று (மார்ச் 10) அதிகாலை குழந்தைக்கு பால் கொடுப்பதற்காக எழுப்பிய போது குழந்தை மூச்சு சுவாசம் இல்லாமல் இருந்துள்ளது. உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது, குழந்தை முன்னரே இறந்து விட்டதாக வைத்தியர் தெரிவித்துள்ளார். வவுணதீவு பொலிஸாரின் வேண்டுகோளுக்கு அமைய…

Read More

அநாகரிகமாக செயற்பட்ட யூடியூப்பர் உள்ளடங்கலாக நால்வருக்கு 14 நாட்களுக்கு விளக்கமறியல்.

அண்மையில் யூடியூப்பர் ஒருத்தர் உதவி செய்வதாக கூறி அநாகரிகமாக நடந்துகொண்ட காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி மக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து குறிப்பிட்ட யூடியூப்பர் உட்பட நால்வர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர்கள் வெளியிட்ட காட்சி சர்ச்சைக்குள்ளானதை தொடர்ந்து அந்த குழு மீண்டும் அந்த குறிப்பிட்ட வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) சென்றவேளை ஊர் இளைஞர்கள் அவர்களை மடக்கி பிடித்து இளவாலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இந்நிலையிலேயே…

Read More

ஐசிசி செம்பியன்சிப் 2025 இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றி

ஐசிசி செம்பியன்சிப் 2025 இன் இறுதிப்போட்டியில் இந்திய அணி 4 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் நியூஸ்லாந்து அணியை வெற்றி பெற்று கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது. துபாய் சர்வதேச மைதானத்தில் இடம்பெற்ற ஐசிசி செம்பியன்சிப் 2025 இறுதிப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸ்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 16 உதிரிகள் அடங்கலாக 251 ஓட்டங்களை பெற்றுகொண்டது. நிஸ்லாந்து அணி சார்பாக அதிகபட்சமாக தரில் மிட்செல் 63 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இந்திய அணி…

Read More

இரத்தக்காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு

காலி மாவட்டம், பிட்டிகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொடாமுன பகுதியில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக இரத்தக்காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொடாமுன பகுதி பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமையசம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் மேற்படி நபரை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும்போது, அவர் இடைவழியிலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பிட்டிகல, கொடாமுன பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் ஆவார். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொடாமுன போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மேலதிக…

Read More

அச்சுவேலி பிரதே வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம்

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டமானது ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவனின் வழிகாட்டலில் இன்று (மார்ச் 9) அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்டது. குறித்த வேலைத்திட்டத்தில் பிரதேச வைத்தியசாலையின் பணியாளர்கள், நோயாளர் நலன்புரி சங்கத்தினர், அச்சுவேலி பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள், அச்சுவேலி சிற்றூர்தி சங்கத்தினர், சன சமூக நிலைய உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த செயற்த்திட்டத்தின் போது அச்சுவேலி பிரதேச சபையின் உதவியுடன் பிரதேச வைத்தியசாலையில் உள்ளக வளாகங்களை…

Read More

இலங்கையை வந்தடைந்த பராசக்தி HERO – SK IN SL

சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படமான “பராசக்தி” படம் வரலாற்றை பின்னணியாக கொண்ட திரைப்படமாக இருப்பதனால் அதற்க்கேற்ற காட்சிகளை தத்துரூபமாக எடுப்பதற்கு படக்குழு இலங்கை வந்துள்ளது. இந்த திரைப்ப்டுத்திற்க்கான காட்சிகள் இலங்கையில் பல இடங்களில் படமாக்கப்படவுள்ளன. இதற்காக “பராசக்தி” குழு 10நாட்கள் செலவிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. படக்குழுவோடு சிவகார்த்திகேயன் இன்று(மார்ச் 09) இலங்கை வந்து இணைந்துகொண்டார். இந்த படப்பிடிப்புக்கான சகல ஏற்பாடுகளையும் இலங்கையில் Iyngaran Media Solution ஏற்பாடுசெய்துள்ளதோடு இலங்கையில் உள்ள கலைஞர்களுக்கும் வாய்ப்புகளை வழங்க தயாரா உள்ளார்கள்.

Read More

First Capital strengthens Market Dominance in 3Q of FY 2024-25

First Capital Holdings PLC (the Group), a leading financial solutions provider, has reported a Total Comprehensive Income of Rs. 4.53Bn for the nine months ended 31 December 2024, demonstrating its ability to capitalise on market opportunities and drive sustained growth. While last year’s bottom-line result of Rs. 9.35Bn was bolstered by extraordinary gains from falling…

Read More

கூடிய விரைவில் குறைந்த விலையிலான மதுபானம் அறிமுகம்

இலங்கை மதுவரித் துறை, நாட்டில் சட்டவிரோத மதுபான பயன்பாடு அதிகரித்ததை கட்டுப்படுத்தும் நோக்கில், குறைந்த விலையிலான புதிய மது வகையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்திருந்தது. பொது நிதி குழுவின் (COPF) அண்மைய கூட்டத்தில், மதுபான விலைகள் அதிகரித்ததால் பலர் சட்டவிரோத மதுபானம் அருந்தத் தொடங்கியிருப்பதுடன், இதனால் அரசாங்க வரி வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மதுவரித் துறை ஆணையாளர் நாயகம் உதய குமார தெரிவித்ததுடன் முறையான ஒழுங்குமுறைகள் மற்றும் கண்காணிப்பின் மூலம், சட்டவிரோத மதுபானங்களை தடை செய்து, மக்களை…

Read More

க.பொ. த சாதாரண தர மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு.

கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான (G.C.E O/L) பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகள் அனைத்தும் எதிர்வரும் 11 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் 17 ஆம் திகதி 2024ம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை ஆரம்பமாகி மார்ச் 26 ஆம் திகதி நிறைவடைய உள்ளதால் வரும் செவ்வாய்க்கிழமை (மார்ச் 11) முதல் மேலதிக வகுப்புகள் மற்றும் செயலமர்வுகள் நடத்த தடை…

Read More

“BATTLE OF THE BLUES” 2025 – வெற்றி சென்.தோமசுக்கு உரித்தானது.

கொழும்பு எஸ்.எஸ்.சி. விளையாட்டரங்கில் நேற்று (மார்ச் 08) முடிவடைந்த 146வது”BATTLE OF THE BLUES” என அழைக்கப்படும் நீலவர்ணங்களின் சமரில் றோயல் கல்லூரியினை 5 விக்கெட் வித்தியாசத்தில் சென். தோமஸ் அபார வெற்றியீட்டியது. இந்த வெற்றியுடன் இதுவரை நடைபெற்ற நீலவர்ணங்களின் சமரில் 36 – 36 என சமநிலையை இரண்டு பாடசாலைகளும் பெற்றுள்ளன. இந்தப் போட்டியில் றோயல் அணி நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவர்களில் 233 ஓட்டங்களை சவால் மிக்க வெற்றி இலக்காக வைக்க அதை எட்டிப்பிடிக்க இரண்டாவது…

Read More