Doneproduction

ஹட்டன் ஷெனன் தோட்டத்தில் தீ விபத்து

ஹட்டன் ஷெனன் தோட்ட தொகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் இன்று இரவு 7.30 அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது குறித்த தீ விபத்தில் 12 வீடுகள் முற்றாக எரிந்துள்ளதாகவும், எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் ஹட்டன் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த தீ விபத்துக்கு மின் கசிவு காரணமாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

Read More

உள்ளூராட்சி மன்ற தேர்தல் – வேட்புமனு கோரல் திகதி அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் மார்ச் 17 ஆம் திகதி முதல் கோரப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் மார்ச் 20 திகதி நண்பகல் 12 மணிவரை குறித்த வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தினரின் தீர்மானம்

அனைத்து எரிபொருள் விநியோகஸ்தர்களும் மீண்டும் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பி, எரிபொருள் ஓர்டர்களைப் பெறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் குசும் சந்தநாயக்க தெரிவித்தார். இன்று (03) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டபோதே அவர் இதனை தெரிவித்தார். அரசாங்கத்துடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தி தற்போதைய பிரச்சினைக்கு தீர்வு காண எதிர்பார்ப்பதாகவும் அதேபோல், நாளை (04) பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவருடன் கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளதாகவும், அந்த கலந்துரையாடலுக்கு பின்னர் இது தொடர்பாக தமது சங்க…

Read More

ரயில்களில் யானைகள் மோதி இடம்பெறும் விபத்துக்களை குறைக்க உயர் நீதிமன்றில் மனு தாக்கல்

ரயில்களில் யானைகள் மோதி இடம்பெறும் விபத்துக்களை குறைக்க ஒரு முறையான திட்டத்தை உருவாக்க வேண்டும் என்றும், இது தொடர்பில் அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதன் மூலம் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாகத் தீர்ப்பளிக்க வேண்டும் என்று கோரியும் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் நீதி மையம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குழுவால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவில் வனவிலங்கு பணிப்பாளர் நாயகம், ரயில்வே பொது முகாமையாளர், போக்குவரத்து…

Read More

மாணவனை தாக்கிய அதிபருக்கு விளக்கமறியல்

பொலன்னறுவை பகுதியில் பாடசாலை மாணவனை தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தான் கல்விகற்கும் பாடசாலையின் அதிபர் பாடசாலை நேரத்தில் தன்னைத் தாக்கி சித்திரவதை செய்ததாகக் கூறி, 17 வயது மாணவனால் முறைப்பாடளிக்கப்பட்டதை தொடர்ந்து, அப்பாடசாலையின் அதிபர் கைது செய்யப்பட்டார். சந்தேகத்திற்குரிய அதிபர், தலைமுடி வெட்டப்படவில்லை எனவும், கருப்பு நிற காலுறை அணிந்து பாடசாலைக்கு வந்ததாகவும் கூறி குறித்த மாணவனை…

Read More

கீத் நொயார் கடத்தல் விவகாரம் – கைதான இருவர் பிணையில் விடுவிப்பு

2008ஆம் ஆண்டு ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இலங்கை இராணுவத்தின் முன்னாள் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் இருவருக்கு கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது. 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் சந்தேகநபர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நவகத்தேகம மற்றும் உலுக்குளம் பகுதிகளைச் சேர்ந்த 42 மற்றும் 46 வயதுடைய இராணுவ புலனாய்வு பிரிவில் கடமையாற்றிய ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் இருவர் ஆவர்.

Read More

வனவிலங்கு சேதத்தை குறைக்க அரசின் புதிய நடவடிக்கை

வன விலங்குகளால் பயிர்கள் சேதமடைவதைத் தடுக்கவும், பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகளின் மேலாண்மைக்குத் தேவையான பரிந்துரைகளைப் பெறவும் சிறப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. விவசாயம், கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த ஆலோசனை வழங்கியுள்ளார். இந்தக் குழுவின் தலைவராக விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் மேலதிக செயலாளர் டி. எஸ் ரத்னசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இந்த குழுவிற்கு மேலும் 15 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Read More

மோசமான வானிலையால் 4 மாவட்டங்களில் 716 பேர் பாதிப்பு

இலங்கையின் சில பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் சீரற்ற காலநிலையினால் 4 மாவட்டங்களில் 176 குடும்பங்களைச் சேர்ந்த 716 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, கடும் வெப்ப நிலை காரணமாக 2 மாவட்டங்களில் 1282 குடும்பங்களைச் சேர்ந்த 3834 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்ட மக்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் கைது

செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெரலுகஹ பகுதியில் 146 சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எம்பிலிப்பிட்டிய பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் இந்த கைது இடம்பெற்றுள்ளது. சந்தேக நபர் செவனகல பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 34 வயதுடைய கொளர வடக்கு பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

உப்பு விலையைக் குறைக்க உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை

நுகர்வோர் விவகார அதிகாரசபை மற்றும் உப்பு உற்பத்தி நிறுவனங்களுக்கு இடையிலான கலந்துரையாடல் கடந்த 25 ஆம் திகதி நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. தொழில்துறை மற்றும் உணவுப் பொருட்களுக்குப் பயன்படுத்தப்படும் உயர்தர உப்பை நியாயமான விலையில் சந்தையில் வெளியிடுவதற்குத் தேவையான ஒழுங்குமுறைகளைச் செய்வதே இந்தக் கலந்துரையாடலின் நோக்கமாகும். சந்தையில் விற்கப்படும் உப்பின் விலைகள் தொடர்பில் அதிகாரசபை முன்னெடுத்துவரும் கணக்கெடுப்பின் படி, கடந்த காலத்தில் பல்வேறு விலைகளில் உப்பு விற்பனை, பருவகால உப்பு பற்றாக்குறை மற்றும்…

Read More