Doneproduction

இறந்து 8 நிமிடங்களில் மீண்டும் உயிர் பெற்ற பெண்

கொலராடோவைச் சேர்ந்த 33 வயது பிரியானா லாஃபர்டி, மயோக்ளோனஸ் டிஸ்டோனியா எனும் உயிருக்கு ஆபத்தான நரம்பியல் கோளாறால் பாதிக்கப்பட்டவர், சுமார் 8 நிமிடங்கள் மருத்துவ ரீதியாக உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர், தனது நினைவு மறுபக்கத்தில் இருந்த அனுபவத்தை வெளிப்படுத்தியுள்ளார். பிரியானா, தனது உடல் “கைவிட்ட” நிலையில், மருத்துவ ரீதியாக இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார். அப்போது, “தயாராக இருக்கிறீர்களா?” என்று கேட்கும் ஒரு குரலை கேட்டதாகவும், பின்னர் முழு இருளில் மூழ்கியதாகவும் கூறினார். அவரது ஆன்மா உடலில் இருந்து பிரிந்து,…

Read More

இலங்கையில் முகக்கவசங்களின் விலை அதிகரிப்பு

இலங்கையில் முகக்கவசங்கள் மற்றும் கை சுத்திகரிப்பான்களுக்கு உடனடியாக கட்டுப்பாட்டு விலையை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதிய நெருக்கடியான சூழ்நிலையை எதிர்கொள்வதால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் குறிப்பிட்டார். ஊடக சந்திப்பில் உரையாற்றிய சம்பத், தற்போதைய சந்தை விலைகளின் படி, ஒரு முகக் கவசம் 50 ரூபாவாக உயர்ந்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், அறுவை சிகிச்சை முகக்கவசத்தின் விலையை ரூ.10 ஆகக் குறைக்க வேண்டும் என்று கோரினார். மூலப்பொருட்களின் விலை…

Read More

திஸ்ஸ விகாரையை அண்மித்த பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த தடை

பலாலி – தையிட்டி திஸ்ஸ விகாரையை அண்மித்த பகுதிகளில் நாளை வரை சட்டவிரோத ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கு சில தரப்பினருக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உட்பட 27 தரப்பினருக்கு எதிராக இந்த தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தையிட்டி விகாரைக்கு அருகிலோ, அதன் நுழைவாயில், வீதியிலோ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடக்கூடாது எனவும் வழிபாட்டிற்கு வரும் பக்தர்களுக்கு…

Read More

பொலிஸார் மீது தாக்குதல்: ஐந்து சந்தேகநபர்கள் கைது

பேருவளை பொலிஸ் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி உட்பட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது குழுவொன்று தாக்குதல் நடத்தியதை அடுத்து, அவர்கள் காயமடைந்து நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக ஐந்து சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தாக்குதல் தொடர்பாக பேருவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

பொசொன் தினத்தில் பொது மக்களுக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி

ஒழுக்கமான சமூகத்தை கட்டியெழுப்புவதன் மூலமே, நாம் எதிர்பார்க்கும் சமூக, பொருளாதார, மற்றும் அரசியல் மாற்றங்களை நடைமுறையில் சாத்தியமாக்க முடியும். இந்த கூட்டு முயற்சிக்காக அனைவரும் ஒன்றிணையுமாறு, பொசொன் தினத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். பொசொன் வாழ்த்துச் செய்தியை வௌியிட்டு ஜனாதிபதி இதனை தெரிவித்தார். ஜனாதிபதியின் பொசொன் தின வாழ்த்துச் செய்தி பின்வருமாறு பொசொன் தினம் இலங்கையர்களான எமக்கு பல்வேறு சிறப்பான நிகழ்வுகள் நிகழ்ந்த நாளாகும். எமது நாடு தேரவாத பௌத்தம் மற்றும்…

Read More

கொரோனா வைரஸ் தொற்றாளர்களை அடையாளங் காண முடியாத நிலையில் இலங்கை

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களை அடையாளங் காண்பதற்கான முறையானதொரு திட்டம் இதுவரையிலும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் குற்றஞ்சுமத்துகிறது. இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவும் விகிதம் அதிகரித்துள்ள நிலையில், அங்கிருந்து நாட்டுக்கு வருகைதரும் சுற்றுலாப்பயணிகள் தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்காயிரத்தை அண்மித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, டெங்கு, சிக்குன்குன்யா, இன்புளுவென்சா மற்றும் கொரோனா வைரஸ் தொற்று அபாயங்கள்…

Read More

இலங்கையில் கிறீம் – லோஷன்கள் வாங்குபவர்களுக்கு விசேட அறிவித்தல்

இலங்கையில் கிறீம்களில் கன உலோகங்களின் அளவு அங்கீகரிக்கப்பட்ட அளவை விட மிக அதிகமாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் சந்தையில் இருந்து பெறப்பட்ட சருமப் பூச்சு கிறீம்கள் மற்றும் லோஷன்களின் மாதிரிகளைப் பரிசோதித்த பின்னர், இந்த விடயம் தெரியவந்துள்ளது. நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையிடமிருந்து பெறப்பட்ட அறிக்கைகளின்படி, பரிசோதிக்கப்பட்ட கிறீம்கள் மற்றும் லோஷன்களின் வியாபாரப் பெயர்களும் அவற்றில் உள்ள கன உலோகங்களின் அளவும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. அங்கீகரிக்கப்பட்ட கன உலோக அளவுகளுடன் கூடிய வர்த்தமானி அறிவிப்பின் நகல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது….

Read More

கொலராடோ தாக்குதலுக்கு இஸ்ரேலின் ஐ.நா தூதர் கண்டனம்

ஹமாஸ் சிறையிலிருந்து பணயக்கைதிகளை பாதுகாப்பாக மீட்டுத் தருமாறு அழைப்பு விடுத்து அமைதியான பேரணியில் பங்கேற்றவர்கள் மீது மோலோடோவ் காக்டெய்ல்களை ஒருவர் வீசிய சம்பவத்தைத் தொடர்ந்து, கொலராடோவின் போல்டரில் யூத ஆர்ப்பாட்டக்காரர்கள் குழு மீது நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபைக்கான இஸ்ரேல் தூதர் டேனி டானன் ஒரு பயங்கரவாதச் செயலாகக் கண்டித்துள்ளார். 45 வயதான முகமது சப்ரி சோலிமான் என அடையாளம் காணப்பட்ட தாக்குதல் நடத்தியவர், தாக்குதலைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டார், இதனால் பலர் காயமடைந்தனர்….

Read More

மிகப்பெரிய கைதிகள் பரிமாற்றத்திற்கு ஒப்புக்கொண்ட உக்ரைன் மற்றும் ரஷ்யா

இதுவரை நடந்த மிகப்பெரிய போர்க் கைதிகள் பரிமாற்றத்துடன், ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான இரண்டாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தை துருக்கிய பெருநகரத்தில் முடிவடைந்தது. ஆனால் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. ரஷ்ய மற்றும் உக்ரைனிய பிரதிநிதிகள் இன்றைய சந்திப்பை முடித்தனர். இது வெளிப்படுத்தப்படாத காரணங்களுக்காக குறைந்தது இரண்டு மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது. இந்த புதிய சுற்று தொடர்புகளில் இரு தரப்பினரும் சுமார் 6,000 போர்க் கைதிகளையும் போரில் கொல்லப்பட்ட வீரர்களின் உடல்களையும் பரிமாறிக்…

Read More

பாரிஸ் கால்பந்து வெற்றிக் கொண்டாட்டத்தில் கலவரம் – நூற்றுக் கணக்கானோர் காயம்

பிரான்சில் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி வெற்றி கொண்டாட்டங்களில் வன்முறை வெடித்ததில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். சாம்பியன்ஸ் லீக் போட்டியில் PSG கால்பந்து கிளப் அணி, இன்டர் மிலனை தோற்கடித்தது. ஆயிரக்கணக்கான PSG ரசிகர்கள், தலைநகர் பாரிஸின் தெருக்களில் இறங்கி பெரிய அளவிலான கொண்டாட்டங்களைத் தொடங்கினர். இந்நிலையில் கூட்டத்தில் எதிர் அணிகளின் ரசிகர்களுக்கும் PSG ரசிகர்களுக்கும் இடையே வாக்குவாதங்கள் வெடித்தன. இது கடுமையான மோதல்களுக்கு வழிவகுத்தது. இந்த வன்முறை சம்பவங்களில் இரண்டு பேர்…

Read More