Doneproduction

பொன்னாலை கடலுக்குள் பாய்ந்த வாகனம்

பொன்னாலை பாலத்தடியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஹையேஸ் ரக வாகனம் ஒன்று சேதமடைந்துள்ளது. காரைநகரில் இருந்து மிருசுவில் நோக்கி பயணித்த குறித்த வாகனம் வேகக்கட்டுப்பட்டை இழந்து பாலத்தில் இருந்து கடலுக்குள் பாய்ந்தது. இந்நிலையில் வாகனம் பாரிய அளவில் சேதத்துக்கு உள்ளாகியது. வாகனத்தில் சாரதி மாத்திரம் இருந்த போதிலும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

Read More

மருத்துவ ஆய்வகம் ஒன்றுக்கு 500,000 ரூபாய் அபராதம்

முழு இரத்த எண்ணிக்கை பரிசோதனை அறிக்கைக்கு அதிக கட்டணம் வசூலித்த மல்வானை பகுதியில் உள்ள மருத்துவ ஆய்வகம் ஒன்றுக்கு 500,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மருத்துவ ஆய்வகம் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து அபராதம் விதிக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. இந்த அபராதம் மஹர நீதவான் நீதிமன்றத்தால் நேற்று (02) விதிக்கப்பட்டது. முழுமையான இரத்த எண்ணிக்கை பரிசோதனை அறிக்கைக்கு நுகர்வோர் விவகார அதிகாரசபையால் விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச கட்டணம் 400 ரூபாய் ஆகும்.

Read More

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (03) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது…

Read More

நைஜீரியா: பேருந்து விபத்தில் 21 தடகள வீரர்கள் உயிரிழப்பு

நைஜீரியாவின் ஓகுன் மாகாணத்தில் தேசிய விளையாட்டு விழா நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற தடகள வீரர்கள் ஒரு பஸ்சில் கானோ நகருக்கு திரும்பி கொண்டிருந்தனர். அந்த பஸ், தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி விபத்தில் சிக்கியது. இதில் 21 தடகள வீரர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்து டிரைவரின் சோர்வு அல்லது அதிக வேகத்தின் காரணமாக ஏற்பட்டு இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். நைஜீரியாவின் மோசமான சாலைகளினாலும் போக்குவரத்து விதிகளை மதிக்காமலும் வேகமாக…

Read More

ரஷ்யாவில் இடிந்து விழுந்த பாலம் : 07 பேர் பலி

ரஷ்யா முழுவதும் தனித்தனி சம்பவங்களில் பாலங்கள் இடிந்து விழுந்ததில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரையன்ஸ்க் பகுதியில் ஒரு நெடுஞ்சாலை பாலம் இடிந்து விழுந்ததில் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் ரயிலில் பயணித்த ஏழு பேர் உயிரிழந்தனர். மற்றும் 69 பேர் காயமடைந்தனர் என்று ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தாக்குதலுக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. அதேநேரம் இது குறித்து உக்ரைன் தரப்பில் இருந்து…

Read More

எனது தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் – சின்மயி உறுதி

தமிழ் படங்களில் பாடுவதற்கு தடை விதிக்கப்பட்ட அதிகாரப்பூர்வமற்ற தடையை எதிர்த்து தனது சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். #meetoo சர்ச்சையைத் தொடர்ந்து, திரையுலகில் சின்மயிக்கு வாய்ப்புகள் கணிசமாகக் குறைந்துவிட்டன, சமீபத்திய ஆண்டுகளில் அவர் ஒரு சில பாடல்களை மட்டுமே பாடியுள்ளார். இருப்பினும், தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் அவர் சமீபத்தில் பாடிய முத்த மழை பாடல் கணிசமான கவனத்தை ஈர்த்தது. இது பாடகி தீ பாடிய அசல்…

Read More

தென்னிந்தியாவில் பணக்கார நடிகராக இடம் பிடித்த நாகர்ஜுனா

இந்தியாவின் பணக்கார நடிகர் என்றால் அது ஷாருக்கான் என அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால், தென்னிந்தியாவில் பணக்கார நடிகர் யார் என்றால் அது உங்களுக்கு தெரியுமா? ஆம், அவரின் சொத்து மதிப்பு மட்டும் ரூ. 3.572 கோடி என கூறப்படுகிறது. அந்த ஹீரோ வேறு யாருமில்லை டோலிவுட் கிங் நாகார்ஜுனாதான். தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி இந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர். தற்போது, இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் கூலி படத்தில் ஒரு…

Read More

புதிய சாதனை படைத்த மெஸ்ஸி

இன்டர் மியாமி அணியின் தலைவனாக லியோனல் மெஸ்ஸி அந்த அணிக்காக குறைவான போட்டிகளில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த லியோனல் மெஸ்ஸி (37) அமெரிக்காவின் இன்டர் மியாமி அணிக்காக கடந்த 2023 முதல் விளையாடி வருகிறார். இன்றைய எம்எல்எஸ் தொடரில் கொலம்பஸ் அணிக்கு எதிரான போட்டியில் 2 கோல்கள் (15’, 24’) 2 அசிஸ்ட்ஸ் செய்து ஆட்ட நாயகன் விருது வென்றார். இதன் மூலம் எம்.எல்.எஸ் தொடரில் அதிக கோல்கள் (31) அடித்த…

Read More

இந்தியாவின் கொட்டி தீர்த்த அடைமழை : இருபத்திற்கும் மேற்பட்டோர் பலி

இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் பெய்து வரும் பருவமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கில் குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அஸ்ஸாம் மாநிலத்தின் குவஹாத்தி நகரில் சனிக்கிழமை ஏற்பட்ட மண்சரிவில் வீடுகள் புதைந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உட்பட ஐந்து பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ வெள்ள அறிக்கை தெரிவித்துள்ளது. சீனாவின் எல்லையை ஒட்டிய அண்டை மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தில், வெள்ளிக்கிழமை வாகனம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் ஏழு பேர் கொல்லப்பட்டனர். மாநிலத்தில்…

Read More

நாகை-காங்கேசன்துறை பயணிகள் கப்பல் போக்குவரத்து மீள ஆரம்பம்

நாகை-காங்கேசன்துறை பயணிகள் கப்பல் போக்குவரத்து 8 நாட்களுக்கு பிறகு மீண்டும் இன்று தொடங்கியுள்ளது. இதில் 112 பேர் பயணம் செய்தார்கள். நாகை துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்துக்கு 2023 அக்டோபர் 14ம் தேதி ‘செரியாபாணி’ என்ற பெயரில் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது. பருவமழை மற்றும் பல காரணங்களால் அதே மாதம் 23ம் திகதி முதல் அந்த கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் சுபம் என்ற கப்பல் நிறுவனம் மீண்டும் நாகையில் இருந்து காங்கேசன் துறைக்கு ‘சிவகங்கை’ என்ற…

Read More