gurueaswar

இந்திய ரசாயன நிறுவனத்துக்கு அமெரிக்கா தடை

ஈரான் ஏவுகணை திட்டத்துக்கு உதவுவதாகக் கூறி இந்திய ரசாயன நிறுவனத்துக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தது. மராட்டியத்தை சேர்ந்த பார்ம்லேண் நிறுவனம், ஏவுகணை உற்பத்திக்கான ரசாயனத்தை ஏற்றுமதி செய்வதாக கூறி தடை விதிக்கப்பட்டுள்ளது.

Read More

பாகிஸ்தான் மருந்து இறக்குமதிக்குத் தடை விதித்து தாலிபான் அரசு !!

கடந்த மாதம் முதலே ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதல் போக்கு தீவிரம் அடைந்து வருகிறது. எல்லை பிரச்சனையால் உருவான இந்த மோதலில் கடந்த மாதம் ஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலால் இன்னும் தீவிரம் அடைந்தது. பொருளாதார விவகாரங்களுக்கான துணை பிரதமர் முல்லா அப்துல் கனி பரதர் இது குறித்து பேசும்போது பாகிஸ்தானின் மருந்துகளின் தரம் குறைவாக இருப்பது ஆப்கானிஸ்தானில் சுகாதாரத்துறையில் ஒரு பெரிய பிரச்சனையாக மாறியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் வர்த்தகம்…

Read More

அடுத்த ஆண்டுக்கான பாடசாலை பரீட்சை திகதிகள் அறிவிப்பு

அடுத்த வருடத்திற்கான பாடசாலை பரீட்சைகளின் திகதிகள் குறித்த அறிவிப்பை இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.  அதன்படி, 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் பெப்ரவரி 17 ஆம் திகதி முதல் பெப்ரவரி 26 ஆம் திகதி வரையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.  அதேநேரம் 2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை அடுத்த ஆண்டு ஒகஸ்ட் 9 ஆம் திகதி நடைபெறும் என்றும், க.பொ.த உயர் தரப் பரீட்சை 2026 ஒகஸ்ட்…

Read More

ராக்கெட் தொழில்நுட்பத்தில் வெற்றியடைந்த 2வது நிறுவனமாக மாறியது ஜெஃப் பெஸோஸின் Blue Origin

மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட் தொழில்நுட்பத்தில் வெற்றியடைந்த 2வது நிறுவனமாக மாறியது ஜெஃப் பெஸோஸின் Blue Origin!. நாசாவின் ‘ESCAPADE’ என்ற இரு விண்கலன்களை செவ்வாய் கிரகத்தை நோக்கி ஏவிய பிறகு, Blue Origin நிறுவனத்தின் New Glenn ராக்கெட் பூஸ்டர் அட்லாண்டிக் பெருங்கடலில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

Read More

டிஜிட்டல் மயமாக்கல் திறன்களை மேம்படுத்த ஒரு மில்லியன் ரூபா

‘சமூக சக்தி’ திட்டத்தின் கீழ் மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களின் டிஜிட்டல் மயமாக்கல் திறன்களை மேம்படுத்த ஒரு மில்லியன் ரூபா சமூக சக்தி தேசிய வேலைத் திட்டத்தின் கீழ், நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களுக்குத் தேவையான மடிக்கணனிகள் மற்றும் கணனிகள் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் சேவைகளை பெற்றுக்கொள்ளவும், அவை தொடர்பாக அதிகாரிகளின் திறன் மேம்பாட்டிற்காகவும் தலா ஒரு மில்லியன் ரூபாவை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுமக்களுக்கு சிறந்த,…

Read More

“டுபாய் தனுஷ்க”வின் சகாக்கள் கைது!

பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான “டுபாய் தனுஷ்க” என்பவரின் சகாக்கள் இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் கொழும்பு வெல்லம்பிட்டி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து 200 கிராம் 590 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More
heroine_case_arrest

குளியாப்பிட்டிய பகுதியில் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

குளியாப்பிட்டிய – வீரகம பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குளியாப்பிட்டிய பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகத்தினரால் நேற்று வியாழக்கிழமை (13) மாலை இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. அவரிடமிருந்து, 287 கிராம் 650 மில்லிகிராம் ஹெராயின் மற்றும் 168 கிராம் 480 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபர் உடுபத்தாவ பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குளியாப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

மட்டக்களப்பு கிரானில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த மோட்டார் குண்டு மீட்பு

மட்டக்களப்பு – கிரான், கருங்காளியடி பகுதியில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த மோட்டர் குண்டு ஒன்றை கடந்த 12ஆம் திகதி கண்ணிவெடி அகற்றும் மெகா அமைப்பினர் மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் இயங்கிவந்த இராணுவ முகாம்; தற்போது காணி உரிமையாளர்களிடம்; ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், கண்ணிவெடிகளை அகற்றும் பணியினை மெகா கண்ணிவெடிகளை அகற்றும் அமைப்பு மேற்கொண்டுவருகிறது. குறித்த நடவடிக்கைகளின்போதே, மோட்டார் குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Read More

தெருநாய் அதிகரிப்பால் விபத்துகள்

நாட்டில் தெருநாய்கடி எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும்  தெருநாய்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருப்பதாகவும்  தேசிய விலங்கு நல நிறுவனம் தெரிவித்துள்ளது.  இதன்படி நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 250,000 க்கும் மேற்பட்ட நாய்கடி சம்பவங்கள் பதிவாகின்றன என தேசிய விலங்கு நல நிறுவன நிர்வாகக் குழு உறுப்பினர் சம்பா பெர்னாண்டோ  தெரிவித்துள்ளார்.  இதேவேளை, இலங்கையில் இரண்டு முதல் மூன்று மில்லியன் தெரு நாய்கள் இருப்பதாக விலங்கு நல நிறுவன நிர்வாகக் குழுவின் மற்றுமொரு உறுப்பினர்  கிஹான் தினுஷ்கா தெரிவித்துள்ளார். …

Read More

வரவு – செலவுத் திட்டம் 2026 : வாக்கெடுப்பில் கலந்துகொள்வதில்லை என இலங்கை தமிழ் அரசுக் கட்சி தீர்மானம்

2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 14) பாராளுமன்றில் இடம்பெறவுள்ள நிலையில், இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்வதைத் தவிர்ப்பதற்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சி (ITAK) தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், இத்தீர்மானம் குறித்து ஊடகங்களுக்குத் தெரிவித்தார். இன்றைய வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்வதைத் தவிர்ப்பது (Absenting from the…

Read More